தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த
'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. 'வாரிசு' பட விழாவில் விஜய்யை சிலர் 'சூப்பர் ஸ்டார்' என சொன்ன பிறகு அந்த சர்ச்சை அதிகமானது.
இந்நிலையில் முதல்முறையாக தனது நடிப்பில் நடிகர் ரஜினியின் சாயல் தென்படும் என்று சிவகார்த்திகேயன் வெளிப்படையாகப் பேசி உள்ளது மீண்டும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வெளிவர உள்ள படத்தின் பெயர் 'மாவீரன்'. அப்பெயரில் ரஜினிகாந்த் ஏற்கெனவே நடித்திருந்தார்.
அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தன்னிடம் ரஜினி சாயல் இருப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருப்பது மறைமுகமாக எதையோ சொல்ல வருவதுபோல இருக்கிறது என்று பேசத் தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.
படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு 16 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் அவர் 11 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்து இருக்கிறார். மீதம் உள்ள 4 கோடி ரூபாய் இதுவரை கொடுக்கப்படவில்லை.
அதனால் தனது சம்பள பாக்கி ரூ.4 கோடியை தனக்கு தரக்கோரி சிவகார்த்திகேயன் தரப்பில் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீண்ட நாள்களாக விசாரணை யில் இருந்து வந்தது. நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு
வந்தது.
அப்போது இரு தரப்பும் சமரசம் செய்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

