'சுவாரசியமான சவால்கள்'

3 mins read
e579cf09-76d4-40ea-9b6e-0ac6bc9d99f5
-

தமிழ் சினிமா ரசி­கர்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்தி­ருந்த 'விடு­தலை' படத்­தில் நாய­கி­யாக நடித்­துள்­ளார் பவானி ஸ்ரீ. இசை­ய­மைப்­பா­ளர் ஜி.வி.பிர­கா­ஷின் சகோ­தரி.

எனி­னும் ஜிவி­யின் பெய­ரைப் பயன்­ப­டுத்­தாமல் தனக்­கென தனி வழி­யைத் தேர்வு செய்து நடை­போட்டு வரு­கி­றார். இது­வரை தனது திற­மையை மட்­டுமே மூல­த­ன­மா­கக் கொண்டு திரை­யு­ல­கில் வலம் வரு­வ­தா­கச் சொல்­கி­றார் பவானி.

அண்­மைய பேட்டி ஒன்­றில் 'விடு­தலை' பட அனு­ப­வங்­கள் குறித்து அவர் விலாவாரி­யா­கப் பேசி­யுள்­ளார். அதைக் கேட்­போம்.

"வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் நடிக்க வேண்­டும் என்­பது எனது நீண்ட நாள் ஆசை. என் சகோ­த­ரர் அவ­ரது இயக்­கம் குறித்­தும் அவ­ரது படங்­கள் உரு­வான விதம் குறித்து நிறைய தக­வல்­க­ளைப் பகிர்ந்­துள்­ளார். அவற்றை எல்­லாம் கேட்­கும்­போது பிர­மிப்­பாக இருக்­கும்.

"பின்­ன­ணிக் குரல் பதிவு முடிந்த பிற­கு­தான் எவ்­வ­ளவு பெரிய படைப்­பில் நாமும் இருக்­கி­றோம் என்­பதை என்­னால் உணர முடிந்­தது. இந்­தப் படைப்பை உரு­வாக்க அனை­வ­ருமே சிர­மப்­பட்­டோம். ஆனால் இது ஒரு வெற்­றிப்­ப­ட­மாக உரு­வாகி இருக்­கிறது எனில் அதற்கு இயக்­கு­நர் மட்­டுமே முதன்­மைக் காரணம் என்­பேன்.

"வெற்­றி­மா­றன் தனது கதா­பாத்­தி­ரங்­க­ளைச் சித்­தி­ரிக்­கும் விதம் அலா­தி­யா­னது. ஒரு படம் தொடர்­பான அவ­ரது அணு­கு­மு­றையை வெகு­வாக ரசிப்­பேன்," என்று சொல்­லும் பவானி ஸ்ரீ, 'விடு­தலை' படத்­தில் நடித்­த­போது பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார். பெரும்­பா­லான காட்­சி­களை மலைப்­பாங்­கான பகு­தி­களில் பட­மாக்­கி­ய­தால் பல்­வேறு சிர­மங்­க­ளைச் சமா­ளிக்க வேண்­டி­யி­ருந்­த­தாம்.

"நான் இது­வரை சிறிய அள­வில் கூட மலை­யேற்­றப் பயிற்சி மேற்­கொண்­ட­தில்லை. மேலும், பழங்­குடி­யின மக்­க­ளின் வாழ்க்­கைச் சூழல் குறித்­தும் ஏதும் தெரி­யாது. இந்­தப் படத்­தின் கதை எந்­தக் காலக்­கட்டத்­தில் நடக்­கிறது என்­பது குறித்து புரி­த­லும் தெளி­வும் தொடக்­கத்­தில் இல்லை.

"ஆனால் வெற்­றி­மா­றன் சார் எல்­லா­வற்­றுக்­கும் ஒரு திட்­டம் வைத்­தி­ருப்­பார். எனது கதா­பாத்­தி­ரத்தை எப்­படி வெளிப்­ப­டுத்­து­வது என நான் யோசித்­துக் கொண்­டி­ருந்­த­போது, நேர­டி­யாக படப்­பி­டிப்­புக்கு வந்­து­வி­டுங்­கள், எல்­லா­வற்­றை­யும் அங்கே பார்த்­துக் கொள்­ள­லாம் என்று ஒற்றை வரி­யில் முடித்­து­விட்­டார்.

"படப்­பி­டிப்­புக்­குச் சென்­ற­தும் அப்­ப­கு­தி­யில் வசிக்கும் பழங்­கு­டி­யின மக்­களை பார்த்து, சில நிமி­டங்­கள் பேசு­மாறு கூறி­னார். இதன் மூலம் அம்­மக்­க­ளின் வாழ்­வி­யல் குறித்து ஓர­ளவு தெரிந்து­கொண்­டேன். அதன் பிறகு அம்மக்களின் பழக்க வழக்­கங்­கள், பேச்சு நடை ஆகி­ய­வற்றை கவ­னித்­தேன்.

"வெற்­றி­மா­றன் எதை­யும் முன்­கூட்­டியே தெரி­விக்­க­மாட்­டார் என்ற விஷ­யம் எனக்கு இப்­ப­டத்­தில் நடிக்­கத் தொடங்­கிய பிறகே தெரி­ய­வந்­தது. படப்­பி­டிப்­புக்­குச் சென்ற பிற­கு­தான் அது எந்த இடம் என்­பது தெரி­ய­வ­ரும். அங்கு அமர்ந்­து­தான் அவர் அன்­றன்று எடுக்­கப்­படும் காட்­சி­க­ளுக்­கான வச­னங்­களை முடிவு செய்­தார். அதன் பிறகே காட்­சியை நமக்கு விளக்­க­மா­கச் சொல்லி, அதைப் பட­மாக்­கு­வார்.

"இவ்­வாறு எதை­யும் முன்­கூட்­டியே அவர் தெரி­விக்­க ­மாட்­டார் என்­ப­தும் எதை­யுமே யூகிக்க இய­லா­த­­தும்­தான் பெரிய சவால்­களாக இருந்­தன என்­பேன். எனி­னும் இந்­தச் சவால்­கள் சுவா­ர­சி­ய­மா­னவை," என்று சொல்­லும் பவா­னிக்கு ஊட­கத்­து­றை­யில் பணி­யாற்ற வேண்­டும் என்­ப­து­தான் கன­வாம்.

நடிக்க வரு­வ­தற்கு முன்பு புகைப்­ப­டக் கலை­ஞ­ராக முயற்சி செய்­துள்­ளார். பிறகு நெருக்­க­மான நண்­பர்­க­ளு­டன் குறும்­படங்­களில் இணைந்து பணி­யாற்றி உள்­ளார். உதவி இயக்­கு­ந­ரா­க­வும் செயல்­பட்­டுள்­ளா­ராம்.

"இவை­யெல்­லாம் திரைப்­ப­டத்­துறை மீதான எனது ஆர்­வத்தையும் எதிர்­பார்ப்­பு­க­ளை­யும் அடுத்­தக் ­கட்­டத்­துக்­குக் கொண்டு சென்­றன. நடிப்பு என்று வரும்­போது, நாம் இன்­னொ­ரு­வ­ராக மாற வேண்­டி­யி­ருப்­ப­தை­யும் ரசித்­தேன். அனைத்­தை­யும் மீறி இந்­தத் துறை­யில் கிடைக்­கும் பெயர், புகழ், பணம் ஆகி­ய­வை­யும் கவர்ச்­சி­க­ர­மான அம்­சங்­கள்," என்கிறார் பவானி.

, :

தமிழகத்  