தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா

2 mins read
f8cd53df-b71b-481d-8889-c632c9d024fd
-

'பொன்­னி­யின் செல்­வன் 2' படத்­தின் இசை, முன்­னோட்­டக் காட்சித் தொகுப்பு வெளி­யீட்டு விழா சென்­னை­யில் பிரம்­மாண்­ட­மாக நடந்­தது. இதில் அப்­ப­டத்தில் நடித்த அனைத்து நடி­கர், நடி­கை­யர், தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் திரளாகப் பங்­கேற்­ற­னர்.

ஏற்­கெ­னவே 'பொன்­னி­யின் செல்­வன்' முதல் பாகம் வசூ­லில் அசத்­தி­யுள்­ளது. விமர்­சன ரீதி­யா­க­வும் பல்­வேறு தரப்­பி­ன­ரின் பாராட்­டு­க­ளை­யும் பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில் இரண்­டாம் பாகம் ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

'பொன்­னி­யின் செல்­வன்' முதல்­பா­கத்­துக்­குக் கிடைத்த வர­வேற்பைவிட இரண்­டாம் பாகத்­துக்கு பலத்த வர­வேற்பு கிடைக்­கும் என படக்­குழு எதிர்­பார்ப்­ப­தாக ஜெயம் ரவி தெரி­வித்­தார்.

"இவ்­வாறு எதிர்­பார்ப்­ப­தற்கு ஏற்ப படம் சிறந்த படைப்­பாக உரு­வாகி உள்­ளது. முதல் பாகத்­தில் உள்ள உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­கள் அடுத்த பாகத்­தி­லும் இடம்­பெற்­றுள்­ளன.

"முதல் பாகத்­திற்கு ரசி­கர்­கள் கொடுத்த வர­வேற்­புக்கு நன்றி. மேலும், முதல்­பா­கத்தைவிட இரண்­டாம் பாகத்­தில் எனக்­கான பகு­தி­கள் அதி­க­மாக இருக்­கும். அதே­ச­ம­யம் எல்­லோ­ருக்­கும் படத்­தில் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

"கடந்த 20 ஆண்­டு­களில் குறை­வான படங்­க­ளில்­தான் நடித்­துள்­ளேன். நிறைய படங்­களில் நடிக்­க­வும் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் தோன்­ற­வும் விரும்­பு­கி­றேன். இந்த ஆண்டு எனது நடிப்­பில் நான்கு படங்­கள் வெளி­வ­ரும்," என்­றார் ஜெயம் ரவி.

இந்­தப் படத்­தில் நடிக்க தமக்கு வாய்ப்பு கிடைத்­ததே மிகப்­பெ­ரிய பாக்­கி­யம் என்­றார் நடி­கர் ரகு­மான். இது­போன்ற பிரம்­மாண்ட படைப்­பில் நடிக்க வேண்­டும் என்ற விருப்­பம் நிறை­வேறி உள்­ள­தா­க­வும் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் குறிப்­பிட்­டார்.

"இந்­தப் படத்­தில் நடித்­தது பெரிய கன­வைப் போல் உள்­ளது. படத்­தின் இறு­திக்­காட்சி என்னை வெகு­வா­கக் கவர்ந்­தது. இப்­ப­டத்­தில் நடித்த எல்­லோ­ரும் அதில் இருப்­போம்," என்­றார் ரகு­மான்.

நடி­கர் விக்­ரம் பிரபு பேசு­கை­யில், ஒரு ரசி­க­னாக தானும் பட வெளி­யீட்டை எதிர்­பார்த்து பல மாதங்­கள் ஆவ­லு­டன் காத்­துக் கிடந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

முதல் பாகத்­துக்கு ஆத­ர­வ­ளித்த ரசி­கர்­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார் ஐஸ்­வர்யா ராய்.

"ரசி­கர்­க­ளைப் போன்­று­தான் இப்­ப­டத்­தில் பங்­கேற்ற அனை­வ­ரும் அதன் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­பார்த்­தி­ருந்­தோம். ரசி­கர்­க­ளின் பேரன்­புக்கு நன்றி," என்­றார் ஐஸ்­வர்யா.

"மணி­ரத்­னம் இயக்­கத்­தில் நடித்­தால் போதும் என்­பதே எனது இலக்­காக இருந்­தது. சிறு கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும், ஒரு காட்­சி­யில் மட்­டும் நடிக்­கச் சொன்­னா­லும் செய்திருப்பேன்.

"ஆனால் பூங்­கு­ழலி என்ற அரு­மை­யான வேடத்­தைக் கொடுத்­தார் இயக்குநர். அப்பாத்­தி­ரம் ரசி­கர்­கள் மன­தில் இடம்­பிடித்­துள்­ளது. பெரு­மை­யா­கக் கரு­து­கி­றேன்," என்­றார் ஐஸ்­வர்யா லட்­சுமி.