குந்தவை ஆன குழந்தைகள்

குந்தவை ஆன குழந்தைகள்

1 mins read
9c593dea-b4e9-4ae4-900c-4eda7f2893fb
-

'பொன்­னி­யின் செல்­வன்' முதல் பாகம் சிறார்­க­ளை­யும் இளை­யர்­க­ளை­யும் வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது என்­றும் இது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் சொல்­கி­றார் திரிஷா.

அப்­ப­டத்­தில் அவர் குந்­தவை கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

"இளம் பெண்­கள் குழந்­தை­கள் உள்­பட பலர் குந்­தவை போலவே ஆடை அணிந்து புகைப்­ப­டங்­களை எனக்கு அனுப்பி வைத்­த­னர். அந்த புகைப்­ப­டங்­களில் சில­வற்றை நான் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­துள்­ளேன்.

"பிறந்து ஒரு சில நாள்­களே ஆன பச்­சி­ளங் குழந்­தைக்கு குந்­தவை போல் ஒப்­பனை செய்து புகைப்­ப­டம் எடுத்து அனுப்பி இருந்­த­னர். அதைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்," என்­கி­றார் திரிஷா.

இதே படத்­தில் நந்­தினி கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்ள ஐஸ்­வர்யா ராய், அந்த வேடம் தன் மன­துக்கு மிக­வும் நெருக்­க­மா­னது என்று கூறி­யுள்­ளார்.

"இது எனது மன­துக்­குப் பிடித்த படம். மணி­ரத்­னம் இயக்­கிய நிறைய படங்­களில் பல கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து இருக்­கி­றேன்.

"அவை அனைத்­துமே மன­துக்கு நிறைவைத் தந்­தன. ஆனால் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் எனக்கு கொடுத்த நந்­தினி கதா­பாத்­தி­ரத்தை மறக்­கவே இய­லாது," என்­கி­றார் ஐஸ்­வர்யா.