'அது மிக சவாலான வேடம்'

'அது மிக சவாலான வேடம்'

1 mins read
4012d02d-c0af-4fe0-85fc-8d18345d332d
-

சமூக ஊட­கங்­களில் தன்­னைப் பற்றி சிலர் எதிர்­ம­றை­யாக விமர்­சிப்­ப­தை­யும் கிண்­டல் செய்­வ­தை­யும் அறவே கண்­டு­கொள்­வ­தில்லை என்­கி­றார் கீர்த்தி சுரேஷ்.

'நடி­கை­யர் தில­கம்' படத்­தில் மறைந்த நடிகை சாவித்­திரி கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­து­தான் தாம் எதிர்­கொண்ட மிகப்­பெ­ரிய சவால் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"என்­னால் அந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க முடி­யுமா?' என்று சந்­தே­கம் கிளப்­பி­னர். படப்­பி­டிப்பு முடிந்த பிற­கு­தான் அந்த விமர்­ச­னங்­கள் எனது கவ­னத்­துக்கு வந்­தன.

"கேலி, விமர்­ச­னங்­கள் எல்­லா­வற்­றை­யும் ஒதுக்கிவிட்டுப் பார்த்­தால் அந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­தற்­காக நான் பெரு­மைப்­படு­கி­றேன்.

"உண்­மை­யில் சாவித்­திரி கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க மிக­வும் பயந்­தேன். அவ­ருக்கு நிறைய ரசி­கர்­கள் உள்­ள­னர். அவர்­கள் என்னை ஏற்­றுக்­கொள்­வார்­களா? என்ற தயக்­க­மும் இருந்­தது.

"ஆனால் இயக்­கு­நர் நாக அஸ்­வின் என்னை ஊக்­கப்­ப­டுத்­தி­னார். 'இந்த கதா­பாத்­தி­ரத்தை உங்­க­ளால் செய்ய முடி­யும்' என்று தொடர்ந்து கூறி­னார்.

"அவரே என் மீது அவ்­வ­ளவு நம்­பிக்கை வைத்­த­போது என்னை நான் ஏன் நம்­பக் கூடாது என நினைத்­து­தான் அந்த படத்­தில் நடித்­தேன். அதற்குப் பலன் கிடைத்தது," என்­கி­றார் கீர்த்தி.