'வாடி வதங்கி நடித்தேன்'

3 mins read
cd3b15db-611f-4785-a38e-b44dd3371bbd
-

'ராவ­ணத் தோட்­டம்' படத்­துக்­காக வெயி­லில் வாடி, வதங்கி நடித்­த­தா­கச் சொல்­கி­றார் அதன் நாயகி கயல் ஆனந்தி.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் கோடை காலத்­தில் இப்­ப­டத்­துக்­கான படப்­பி­டிப்பு நடை­பெற்­றது என்­றும் ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் எந்­த­வித வச­தி­யும் இன்றி படப்­பி­டிப்­புக்­காக உழைத்­த­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"கொரோனா நெருக்­க­டிக்கு முன்பே இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்­பைத் தொடங்­கி­விட்­டோம். ஆனால், படத்தை முடிக்க ஐந்து ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இடைப்­பட்ட காலத்­தில் எனக்கு திரு­ம­ண­மாகி ஒரு குழந்­தை­யை­யும் பெற்­றெ­டுத்­து­விட்­டேன். எம்­பிஏ பட்ட மேற்­ப­டிப்­பை­யும் முடித்­துள்­ளேன்.

"எனி­னும், இந்­தப் படத்­தின் மீதான ஆர்­வ­மும் எதிர்­பார்ப்­பு­களும் சிறி­தும் குறை­ய­வில்லை. ரசி­கர்­க­ளைப் போலவே ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ரும் பட வெளி­யீட்­டுக்­காக ஆவ­லு­டன் காத்­துக் கிடந்­தோம்," என்­கி­றார் ஆனந்தி.

ராம­நா­த­பு­ரத்­தில் 45 டிகிரி செல்­சி­யஸ் வெப்­பம் பதி­வா­கும்­போது பொது­மக்­கள் வெளியே நட­மாட அஞ்சி வீட்­டுக்­குள் முடங்­கு­வது வழக்­கம். ஆனால், அந்­தக் கடும் வெயில் காலத்­தி­லும் இடை­வெளி இன்றி பல நாள்­கள் தொடர்ந்து படப்­பி­டிப்பை நடத்­தி­னா­ராம் இயக்­கு­நர் விக்­ரம் சுகு­மா­ரன்.

"படப்­பி­டிப்பு நடந்த ஊரில் ஒன்­றி­ரண்டு மரங்­கள் மட்­டுமே ஆங்­காங்கே தென்­பட்­டன. ஒதுங்­கு­வ­தற்கு நிழல்­கூட இல்­லா­மல் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல. ஆனால், ஒவ்­வொரு காட்­சி­யும் தாம் எதிர்­பார்த்­த­படி அமைய வேண்­டும் என்­ப­தில் இயக்­கு­நர் பிடி­வா­த­மாக இருந்­தார்.

"கேர­வேன்­கள் இருந்­தா­லும் காட்­சி­க­ளுக்கு இடை­யே­யான ஓய்­வின்­போது இந்த வாக­னங்­க­ளுக்­குள் நாங்­கள் செல்ல முடி­யாது. கார­ணம் குளிர்­சா­தன அறை­யில் அமர்ந்து ஓய்­வெ­டுத்­த­பின் மீண்­டும் கேமரா முன் நிற்­கும்­போது வெயி­லின் கடு­மை­யைத் தாங்க முடி­யாது.

"இதை உணர்ந்­து­தான் இயக்­கு­நர் சில கட்­டுப்­பா­டு­களை விதித்­தி­ருந்­தார். தொடர்ந்து வெயி­லில் நின்­று­விட்­டால் அது கடு­மை­யாக இருந்­தா­லும் போகப்­போக பழ­கி­வி­டும் என்று அவ்­வப்­போது அறி­வு­றுத்­து­வார்.

"ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு படப்­பி­டிப்பு தொடங்­கி­ய­போது நான் அணிந்து நடித்த உடை­கள் எதை­யும் இறு­திக்­கட்ட படப்­பி­டிப்­பின்­போது அணிய முடி­ய­வில்லை. எனது உடல் சற்று பெருத்­து­விட்­ட­தா­லும் ஆடை­கள் சற்றே சுருங்­கி­விட்­ட­தா­லும் சிர­மப்­பட்­டேன்.

"இதே போல் படப்­பி­டிப்பு நடக்­கும் இடங்­க­ளி­லும் சில மாற்­றங்­கள் ஏற்­பட்­டி­ருந்­தன. இவை அனைத்­தை­யும் மன­திற்­கொண்டு சில ஏற்­பா­டு­களை முன்பே செய்து வைத்­தி­ருந்­தார் இயக்­கு­நர். எனக்கு மீண்­டும் உடை­கள் தைக்­கப்­பட்­டன. அவற்­றில் சிறு மாற்­ற­மும் இல்­லா­மல் தையல் கலை­ஞர் பார்த்­துக்­கொண்­டார்.

"அதே போல் படப்­பி­டிப்­பை­யும்­கூட வெயில் காலத்­தில்­தான் நடத்­தி­னார் இயக்­கு­நர் விக்­ரம். வெயில் காலம் முடிந்­து­விட்­டால் அடுத்த ஆண்டு வரை காத்­தி­ருந்­தார். இந்த அள­வுக்கு நேர்த்­தியை எதிர்­பார்க்­கும் இயக்­கு­நர்­கள் மிகக் குறைவு.

"அந்த வகை­யில் திறமை வாய்ந்த இயக்­கு­ந­ரின் படத்­தில் நடித்த மன­நி­றைவு கிடைத்­துள்­ளது. என்­னு­டன் பணி­யாற்­றிய அனை­வ­ருமே கடு­மை­யாக உழைத்­த­னர். குறிப்­பாக, கதா­நா­ய­கன் சாந்­த­னு­வின் அர்ப்­ப­ணிப்பு என்னை வியக்க வைத்­தது.

"குறிப்­பிட்ட ஒரு காட்­சியை நண்­ப­கல் வேளை­யில் படம்­பி­டித்­த­னர். அந்­தக் காட்­சி­யில் காலணி ஏதும் அணி­யா­மல் தார் போடப்­பட்­டுள்ள சாலை­யில் அவர் ஓடி­னார். அதி­லும் சில தவ­று­கள் கார­ண­மாக அந்­தக் காட்சி நான்­கைந்து முறை எடுக்­கப்­பட்­டது. இத­னால் சாந்­த­னு­வின் கால்­களில் கொப்­பு­ளங்­கள் ஏற்­பட்­டன.

"ஆனால், காட்சி பட­மாக்­கப்­பட்டு முடி­யும் வரை அவர் எந்த உணர்­வை­யும் வெளிப்­ப­டுத்­த­வில்லை. அந்­தக் காட்­சி­யில் மட்­டுமே அவ­ரது முழுக் கவ­ன­மும் இருந்­தது. பின்­னர்­தான் அவ­ரது காலில் ஏற்­பட்ட வெப்ப கொப்­பு­ளங்­க­ளைக் கண்டு அனை­வ­ரும் அதிர்ச்சி அடைந்­தோம்.

"அதன் பின்­னர் சிகிச்சை பெற்­றார் சாந்­தனு. எனி­னும், இதே போல் மேலும் பல காட்­சி­களில் அவர் நடித்­தி­ருந்­தார். சாந்­தனு நிச்­ச­யம் முதல் வரிசை நடி­க­ராக உயர்­வார் என்­ப­தில் எனக்கு சந்­தே­கம் இல்லை.

"பொதுவாக, நடிகர், நடிகைகள் மட்டுமே இதுபோல் சிரமப்படுவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். உண்மையில், படக்குழுவில் உள்ள அனைவருமே இத்தகைய சிரமங்களை எதிர்நோக்குவர்," என்கிறார் ஆனந்தி.

, :

தமிழகத்  