பிரபல பின்னணிப் பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
சுமார் அறுபது பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார் விஜய் ஜேசுதாஸ். அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை யாரோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கொள்ளையடித்துள்ளனர்.
எனினும், பிப்ரவரி மாத இறுதியில்தான் நகைகள் மாயமானது குறித்து விஜய் ஜேசுதாசுக்கு தெரிய வந்துள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் வீட்டுப் பணியாளர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் நகைகள் திருடப்பட்ட நிலையில், விஜய் ஜேசுதாஸ் வீட்டிலும் நகைகள் கொள்ளை போனது திரையுலகத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

