வேதனை அடைந்த வாணி

வேதனை அடைந்த வாணி

3 mins read
885dd1ca-c87a-42f9-a400-069553d8ae4a
-

சமூக ஊட­கங்­களில் பலர் உண்­மைக்­குப் புறம்­பான தக­வல்­களை வெளி­யி­டு­வது வேதனை அளிப்­ப­தா­கச் சொல்­கிறார் வாணி போஜன்.

தன்­னை­யும் நடி­கர் ஜெய்­யை­யும் இணைத்து வெளி­வ­ரும் கிசு­கி­சுக்­களை சினிமா ரசி­கர்­கள் நம்ப வேண்­டாம் என அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அண்­மை­யில் இணை­யம் வழி ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றார் வாணி. அப்­போது ரசி­கர்­கள் எழுப்­பிய பல்­வேறு கேள்­வி­களுக்கு எந்­த­வித தயக்­க­மும் இன்றி வெளிப்­ப­டை­யா­கப் பதி­ல­ளித்­தார்.

ஜெய்­யும் வாணி­யும் திரு­ம­ணம் செய்து­கொள்­ளா­மல் இணைந்து வாழ்­வ­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. இரு­வ­ருக்­கும் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும் எண்­ணம் இல்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது. கலந்­து­ரை­யா­ட­லின்­போது ஒரு ரசி­கர் இது­கு­றித்து கேள்வி எழுப்­பி­னார்.

"நானும் ஜெய்­யும் ஒரே வீட்­டில் தங்கி குடும்­பம் நடத்தி வரு­வ­தாக தக­வல் பர­வி­ய­தும் அவ­ரி­டமே இது­கு­றித்து பேசி­னேன். அவ­ருக்­கும் எனக்­கும் இடையே உறவு உள்­ளது என்று ஊட­கங்­களில் எழுதி இருந்­தால்­கூட கவ­லைப்­பட்­டி­ருக்க மாட்­டேன். ஆனால் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும் எண்­ணம் இன்றி, இரு­வரும் ஒரே வீட்­டில் குடும்­பம் நடத்து ­வ­தாக எழு­தி­யது மிக­வும் கீழ்த்­த­ர­மான செயல். உண்­மை­யைச் சொல்­வ­தா­னால் இந்­தத் தக­வல் என் மனதை வெகு­வா­கக் காயப்­ப­டுத்தியது.

"திரை­யு­ல­கில் கால்­ப­திக்­கும் முன்பு தொலைக்­காட்­சித் தொடர்­களில் நடித்­தேன் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். அப்­போது முதல் கடு­மை­யாக உழைத்து பணம் சேர்த்து, வங்­கி­யி­லும் கடன் பெற்­றுத்­தான் சென்­னை­யில் சொந்த வீடு கட்­டி­யுள்­ளேன். அது எனது கனவு இல்­லம். அந்த வீட்­டில் யாரோ ஒரு­வ­ரு­டன் திரு­ம­ணம் செய்­யா­மல் குடும்­பம் நடத்­து­கி­றேன் என்று சொல்­வது நியா­யமா?

"இப்படிப்பட்ட கிசுகிசுக்களால் சம்பந்தப்பட்டவர்களின் மனம் எந்த அளவுக்கு வேதனை அடையும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பொறுப்பாகச் செயல்படும் எவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்," என்றார் வாணி போஜன்.

இதையடுத்து, கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

தற்போது 'செங்களம்' என்ற இணையத்தொடரில் நடித்து வருகிறார் வாணி. அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவரது வீட்டில் கொள்ளையடிக் கப்பட்டதாக வெளியான தகவலும் உண்மை இல்லையாம். வீட்டுக்குள் புகுந்து திருடிச் செல்லும் அளவுக்கு தம்மிடம் ஏராளமான நகைகளோ, ரொக்கப் பணமோ இல்லை என்றும் வாணி தெளிவுபடுத்தி உள்ளார்.

"என் வீட்டுக்குள் எளிதில் நுழைந்துவிட முடியாது. அப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்துள்ளேன். என் வீட்டில் இருந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் கூறி நான் கதறி அழுவது போன்ற ஒரு காணொளிப் பதிவு அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானது. உண்மையில் அந்தக் காணொளியில் காணப்படுவது நான் நடித்த தொலைக்காட்சித் தொடரில் இடம்பெற்றுள்ள காட்சி. அந்தக் காட்சியைப் பயன்படுத்தி வதந்தியை பரப்பி உள்ளனர்.

"இதேபோல் படப்பிடிப்பின்போது நான் சேலையை ஒழுங்குபடுத்தும்போது திருட்டுத்தனமாக அதைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது எனில், நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது ஒருவித மன வியாதி. அப்படிப் பட்டவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதோ, பேசுவதோ இல்லை," என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது மேலும் ஒரு இணையத்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள இவர், சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதில்லை என்ற நற்பெயரைப் பெற்றுள்ளார்.

, :

தமிழகத்  