கதாநாயகியாக மாறிய பரத நாட்டியக் கலைஞர்

கதாநாயகியாக மாறிய பரத நாட்டியக் கலைஞர்

3 mins read
95e06bcf-f05f-40a6-a7eb-3fe3a69d9e23
-

'கென்­னடி கிளப்' படத்­தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­குக்கு அறி­மு­க­மா­ன­வர் மீனாட்சி கோவிந்­தன். தற்­போது இரண்டு தமிழ்ப் படங்­கள், இணை­யத்­தொ­டர் என்று நடிப்­பில் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

அருள்­நிதி நாய­க­னாக நடிக்­கும் 'டிமாண்டி காலனி 2' படத்­தில் மீனாட்­சிக்கு முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

"எனக்­கான வாய்ப்­பு­கள் தொடர்ந்து தேடி வரு­கின்­றன. இதற்­காக ரசி­கர்­க­ளுக்­குத்­தான் நன்றி சொல்ல வேண்­டும். திரை­யு­ல­கில் நான் அறி­மு­க­மாகி மூன்று ஆண்டு­கள் கடந்­து­விட்­டன. இந்­தக் கால­கட்­டத்­தில் ஒரு சில படங்­களில் மட்­டுமே நடித்­தி­ருந்­தா­லும் எனக்­கென்று ரசி­கர்­கள் தங்­கள் மன­தில் ஓர் இடத்தை அளித்­துள்­ள­னர்.

"இதற்கு முன்பு 'வேலன்', 'வீர­பாண்­டி­ய­பு­ரம்' ஆகிய படங்­களில் நடித்த அனு­ப­வம் இப்­போது வெகு­வா­கக் கைகொ­டுக்­கிறது. மேலும் விக்­ர­மு­டன் நடித்த 'கோப்ரா' படத்­தில் எனது தனித்­து­வ­மான நடிப்பு ரசி­கர்­க­ளைக் கவர்ந்­துள்­ள­தாக விமர்­ச­கர்­கள் குறிப்­பிட்­ட­னர். அதை எனக்­கான பாராட்­டாக எடுத்­துக்­கொள்­கி­றேன்," என்று சொல்­லும் மீனாட்சி அசல் தமிழ்ப் பெண்.

பிறந்து வளர்ந்­தது எல்­லாம் சென்னை மாந­க­ரில்­தா­னாம். பள்­ளிப் படிப்­புக்­குப் பின்­னர் சென்­னை­யி­லேயே கல்­லூ­ரிப் படிப்­பை­யும் முடித்­துள்­ளார்.

இவ­ரது தந்­தை­யும் இயக்­கு­நர் பார­தி­ரா­ஜா­வும் நெருக்­க­மான நண்­பர்­க­ளாம். பார­தி­ராஜா தன் வீட்­டுக்கு வரும் போதெல்­லாம் தனக்கு சினி­மா­வில் நடிக்க வாய்ப்பு வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டே இருப்­பா­ராம்.

"சரி­யான வாய்ப்பு கிடைக்­கும்­போது நடிக்க வர­லாம் என்று பார­தி­ராஜா கூறு­வார். நானும் அவ்­வாறு நினைத்­து­தான் காத்­தி­ருந்­தேன். பள்­ளிப்­ப­டிப்பை முடித்­த­தும் கிடைத்த வாய்ப்­பு­தான் 'கென்­னடி கிளப்'.

"அந்த நல்ல வாய்ப்பு வந்­த­போது அதைத் தவ­ற­விட வேண்­டாமே என்று என் மீது பாசம் கொண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர். அத­னால் கல்­லூரி காலத்­தி­லேயே நடிக்­கத் தொடங்­கி­னேன்.

"அப்­போது இந்­தத் துறை எனக்கு மேலும் பிடித்­த­மான ஒன்­றாக மாறி­விட்­டது. தொடக்­கத்­தில் இருந்தே நான் கலை­யார்­வம் மிக்­க­வள் என்­பது குடும்­பத்­தில் உள்ள அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

"கிட்­டத்­தட்ட பதி­னைந்து ஆண்­டு­கள் பர­த­நாட்­டி­யம் கற்­றுக்­கொண்­டேன். அத­னால், சினி­மா­வில் நடிக்­கப்­போ­வ­தா­கச் சொன்­ன­தும் குடும்­பத்­தார் முழு ஆத­ர­வை­யும் கொடுத்­தார்­கள்," என்று சொல்­லும் மீனாட்சி, 'கென்­னடி கிளப்' படத்­திற்கு முன்பே 'கோப்ரா' படத்­தில் ஒப்­பந்த மாகி­விட்­டார்.

நடிப்­புத் தேர்­வில் பங்­கேற்று தனது திற­மையை நிரூ­பித்த பிறகே அந்­தப் படத்­தில் நடிக்­கத் தேர்­வா­னா­ராம்.

அதில் தன்­னு­டைய கதா­பாத்­தி­ரத்­திற்கு அதிக கவ­னம் கிடைத்­தது என்­றும் இதன் மூலம் மேலும் பல ரசி­கர்­க­ளைச் சென்­ற­டைய முடிந்­தது என்­றும் சொல்­கி­றார்.

"வளர்ந்து வரும் எந்­த­வொரு நடி­க­ருக்­குமே இது­போன்ற பெரிய படங்­களில் கிடைக்­கும் வாய்ப்பு முக்­கி­ய­மா­னது. இந்­தப் படத்­திற்­காக எனக்­குப் பல தரப்­பி­டம் இருந்து பாராட்­டு­களும் வந்து சேர்ந்­தன. 'இவ்­வ­ளவு பெரிய நடி­க­ரு­டன் நாம் வேலை பார்த்­தி­ருக்­கி­றோம்' என்று நினைக்­காத அள­வுக்கு மிக­வும் எளி­மை­யா­கப் பேசிப் பழ­கி­னார் விக்­ரம்.

'கோப்ரா' படத்தை விளம்­ப­ரப்­ப­டுத்த நிறைய ஊர்­க­ளுக்­குச் சென்­றோம். ரசி­கர்­க­ளின் அன்பு குறித்து விக்­ரம் சார் ஒரு விஷ­யம் சொன்­னார்.

"நமக்கு இத்­தனை அன்பு தரு­கி­றார்­கள். ஆனால், அவர்­க­ளுக்கு நாம் நல்ல படங்­கள் தரு­வ­தைத் தவிர வேறு ஒன்­றும் திருப்­பித் தரப்­போ­வ­தில்லை. அத­னால், கதை, கதா­பாத்­திர தேர்­வு­களில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றார். அந்த அறி­வுரை எப்­போ­துமே எனக்கு நினை­வில் இருக்­கும்.

"பணம், புகழ் சம்­பா­திக்க வேண்­டும் என்­ப­தை­யும் கடந்து நல்ல படங்­கள், கதா­பாத்­தி­ரங்­கள் மூலம் மக்­கள் நம்மை நினை­வில் வைத்­துக்­கொள்ள வேண்­டும் என விரும்­பு­கி­றேன். எனக்கு கமல்­ஹா­சனை மிக­வும் பிடிக்­கும். அவ­ரு­டன் ஒரு பட­மா­வது நடித்­து­விட வேண்­டும் என விரும்­பு­கி­றேன். அதை­யும் கடந்து அவ­ரி­டம் ஒரே ஒரு நாளா­வது உத­வி­யா­ள­ராக இருக்­க­வேண்­டும் என்­ப­தும் எனது ஆசை," என்­கி­றார் மீனாட்சி.

, : தமிழகத்  