சமந்தாவின் நடிப்பில் குணசேகர் இயக்கி இருக்கும் படம்
'சாகுந்தலம்'. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற்றது. அப்போது மேடையில் சமந்தாவிற்கு ஜோடியாக நடித்திருந்த நடிகர் பேசிய பேச்சைக் கேட்டு அதிர்ந்துபோன சமந்தா இதுபோல் மேடையில் பேசக்கூடாது என்று அன்பாகக் கண்டித்திருக்கிறார்.
'சாகுந்தலம்' படத்தில் கதாநாயகனாக மலையாள திரையுலகைச் சேர்ந்த தேவ் மோகன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் இன்னும் பத்து நாள்களில் வெளியாவதால் படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு படக்குழு
வினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். சமந்தாவும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதால் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் விளம்பரம் செய்ய கொச்சியில் விளம்பர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் தேவ் மோகன் பேசுகையில், "நான் கல்லூரியில்
படித்துக்கொண்டிருந்தபோது 'நான் ஈ' படம் வெளியானது. அந்தப் படத்தில் நடித்திருந்த சமந்தாவின் நடிப்பையும் அழகையும் பார்த்து பிரமித்து போனேன். அப்போதே நான் அவருடைய ரசிகரானேன். இப்போது அவருடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை," என்று கூறினார்.
அதற்கு பின் பேசிய சமந்தா, "இப்படி பொது இடங்களில் வயதை வெளிப்படுத்தும் விதமாக பேசக்கூடாது,'' என தேவ் மோகனுக்கு நகைச்சுவையுடன் ஓர் எச்சரிக்கை கலந்த வேண்டுகோளை பலரின் முன்னே வைத்தார்.
அப்போதுதான் பலருக்கும் நடிகை சமந்தாவுக்கு வயது 35 என்பதும் நாயகன் தேவ் மோகனுக்கு 30 வயதுதான் ஆகிறது என்பதும் தெரியவந்தது. சமந்தா அதைப்பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் பலரின் முன்னே நகைச்சுவையுடன் பேசி பலரின் கைத்தட்டல்களையும் பெற்றார்.
இவர் அண்மைக்காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அதன்படி 'ரெயின்போ' என்ற படத்திலும் சமந்தா நடிப்பதாக சென் ஆண்டே அறிவிக்கப்பட்டது.
ஆனால் சமந்தா கைநிறைய படங்கள், 'சிடாடெல்' என்ற இணையத்தொடர் ஆகியவற்றில் தொடர்ந்து நடித்து வருவதால் 'ரெயின்போ' படத்திற்காக இயக்குநர் கேட்ட நாள்களை ஒதுக்க முடியாததால் படத்தில் இருந்து வெளியேறினார்.
அந்த வாய்ப்பு தற்பொழுது நடிகை ராஷ்மிகா மந்தனா
விற்குச் சென்றுள்ளது. 'ரெயின்போ' படத்தின் பூஜை திங்கள்கிழமை நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்
படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ராஷ்மிகா. அதைப் பார்த்த சமந்தா வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.
சமந்தாவின் பதிவைப் பார்த்த ரசிகர்கள் செல்லமாக, "சம்முவிற்குத்தான் எவ்வளவு பெரிய மனது. தான் நடிக்க வேண்டிய படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று தெரிந்தும் வாழ்த்தியிருக்கிறார். இந்த நல்ல மனசுக்குதான் அவரின் திரையுலக வாழ்க்கை எப்பொழுதுமே உச்சத்தில் இருக்கிறது," என்று பதிவிட்டு வருகின்றனர்.
சமந்தா 'சாகுந்தலம்' படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

