காவல் அதிகாரி ஆரவ்

காவல் அதிகாரி ஆரவ்

3 mins read

தனது சிறு வயது கனவு நிறை­வேறி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் 'பிக்­பாஸ்' நிகழ்ச்சி புகழ் ஆரவ். இவர் நடிக்­கும் புதிய படம் 'மாருதி நகர் காவல் நிலை­யம்'. தயால் பத்­ம­நாபன் இயக்­கு­கி­றார்.

முதன் முறை­யாக காவல்­துறை அதி­காரி கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார் ஆரவ். இது­தான் அவ­ரது நீண்­ட­கால கன­வாம்.

"சிறு வய­தில் ஐபி­எஸ் அதி­கா­ரி­யாக வேண்­டும் என்ற கன­வு­டன் வலம் வந்­தேன். ஐபி­எஸ் அதி­கா­ரி­யாக வேண்­டும் என்­றால் நிறைய சவால்­க­ளைச் சந்திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று என் நண்­பர்­கள் அடிக்­கடி கூறு­வர். எதை­யும் சந்­திக்­கத் தயார் என்று அவர்­க­ளி­டம் கூறு­வேன்.

"ஐபி­எஸ் அதி­கா­ரி­யாக வேண்­டும் என்ற வேகத்­து­டன் மூன்று ஆண்­டு­கள் அதற்­காக தீவிர பயிற்சி­களை மேற்­கொண்­டேன். தொடக்க நிலை தேர்­வி­லும் தேர்ச்சி பெற்­றேன். எனி­னும் மாட­லிங் துறை­யில் வாய்ப்­பு­கள் தேடி­வந்­த­போது, படிப்­பில் கவ­னம் செலுத்த முடி­யா­மல் போனது.

"விளம்­ப­ரப் படங்­கள், 'பிக்­பாஸ்' நிகழ்ச்சி, திரைப்­பட வாய்ப்­பு­கள் என அடுத்­த­டுத்து எனது கவ­னம் சித­றி­விட்­டது. அத­னால் ஐபி­எஸ் அதி­காரி­யாக வேண்­டும் என்ற கன­வும் கைந­ழு­விப் போனது," என்று கடந்த காலத்தை நினை­வு­கூர்­கி­றார் ஆரவ்.

நிஜ வாழ்க்­கைக் கனவு நிறை­வே­றா­மல் போனா­லும், திரை­யு­ல­கில் காவல்­துறை அதி­கா­ரி­யாக மாறி­யுள்­ளார். 'மாரு­தி­ந­கர் காவல் நிலை­யம்' படத்­துக்­காக காவல்­து­றைக்­கான சீரு­டையை அணிந்­த­போது இனம்­பு­ரி­யா­த­தோர் உற்­சாக உணர்­வும் மன­நிறை­வும் ஏற்­பட்­ட­தா­கச் சொல்­கிறார்.

"இந்­தப் படத்­தின் கதை­யைக் கேட்­ட­போதே அந்த உற்­சா­கம் வந்­து­விட்­டது. படப்­பி­டிப்­பின் முதல் நாளன்று காவல் நிலை­யம் போன்ற அரங்­கில் முதல் காட்­சி­யைப் பட­மாக்­கி­னர். அந்த நாளை என் வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாது.

"அந்­தச் சீரு­டையை எப்­போ­தும் அணிந்­தி­ருக்க விரும்­பி­னேன். படப்­பி­டிப்பு முடிவ­டைந்து தங்கு விடுதி அறைக்­குத் திரும்­பிய பிற­கும்­கூட சீரு­டையை அவிழ்க்க மனம் வராது. குறைந்­தது ஒரு மணி நேரத்­துக்­குப் பிறகே தயக்­கத்­து­டன் வேறு உடைக்கு மாறு­வேன். கிட்­டத்­தட்ட இரு­பது நாள்­கள் படப்­பி­டிப்பு நடை­பெற்­றது. அந்­தச் சம­யத்­தில் நான் விரும்­பி­ய­படி, கற்­ப­னை­யில் காவல்­துறை அதி­கா­ரி­யாக வலம் வந்­தேன்," என்­கிறார் ஆரவ்.

படப்­பி­டிப்பு முடி­வ­டைந்த பின்­னர் இயக்­கு­ந­ரின் அனு­ம­தி­யைப் பெற்று, தாம் அணிந்து நடித்த சீரு­டையை நினை­வுப் பரி­சாக வாங்­கிக்கொண்­டா­ராம். இப்­போது ஆரவ் வீட்­டில் அந்­தக் காக்­கிச்­சட்டை தனிக் கவ­னிப்­பு­டன் பத்­தி­ர­மாக வைக்­கப்­பட்­டுள்­ளது.

'மாருதி நகர் காவல் நிலை­யம்' படத்­தில் ஆரவ் ஜோடி­யாக நடித்­துள்­ள­ளார் வர­லட்­சுமி. கதைப்­படி இவ­ரும் காவல்­துறை அதி­காரிதானாம். இயக்­கு­நர் கதையை விவ­ரித்த ஒரு வாரத்­தி­லேயே படப்­பி­டிப்பு தொடங்­கி­யுள்­ளது.

காவல்­துறை அதி­கா­ரி­களை சந்­தித்­துப் பேச வேண்­டும்; அதன் மூலம் திரட்­டும் தக­வல்­க­ளைக் கொண்டு நடிக்க வேண்­டும் என்று திட்­ட­மிட்­டி­ருந்­தா­ராம்.

ஆனால் ஒரே வாரத்­தில் படப்­பி­டிப்பு தொடங்­கி­விட்­ட­தால் ஆரவ்­வால் யாரை­யும் சந்­திக்க முடி­ய­வில்லை.

"எனி­னும் இயக்­கு­நர் எனது பணியை எளி­தாக்­கி­விட்­டார். அவர் கூறி­ய­படி நடித்­தேன். பின்­னர் திரை­யில் என்­னைப் பார்த்­த­போது எனக்கே வியப்­பாக இருந்­தது. காவல்­துறை அதி­கா­ரிக்­கு­ரிய மிடுக்­கு­டன் நடித்­தி­ருப்­பது மன­நி­றை­வைத் தந்­துள்­ளது. ரசி­கர்­களும் பாராட்­டு­வார்­கள் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் ஆரவ்.

படப்­பி­டிப்­பின்போது கிடைத்த ஓய்வு நேரத்­தில் உடன் நடித்த மூத்த கலை­ஞர்­க­ளு­டன் பேசி மகிழ்ந்­த­தா­க­வும் ஒரு குடும்­ப­மாக அனை­வ­ரும் பேசிப் பழ­கி­ய­தா­க­வும் சொல்­கி­றார்.

"சில சுவா­ர­சி­ய­மான சம்­ப­வங்­களும் நிகழ்ந்­தன. உதா­ர­ண­மாக படப்­பி­டிப்­பின்­போது ஒரு­வரைப் பார்த்து என்ன வேலை செய்­கி­றார் என விசா­ரித்­தேன். அதற்கு பாது­காப்பு பணிக்­காக வந்­துள்­ளேன் என்­றார். பிற­கு­தான் அவர் காவல்­துறை அதி­காரி என்­பதே தெரி­ய­வந்­தது.

"அவரிடம் நிறைய பேசினேன். அவரது பணி சார்ந்த அனுபவங்களையும் கேட்டறிந்தேன். எனது கனவை திரையில் நிறைவேற்றிய இயக்குநருக்கும் தயாரிப்பாளருக் கும் நன்றி," என்­கி­றார் ஆரவ்.

, :

தமி­ழ­கத்  