அதிதி அக்காவைப் பார்த்து நடிக்க வந்தேன்: தனுஷ் ரசிகை ரேவதி

3 mins read
57fff5a6-5f1e-4e66-bf56-72fee097df6e
-

'அருவி' பட நாயகி அதிதி பால­னின் உற­வி­ன­ரான ரேவ­தி­யும் திரை­யு­ல­கில் கால் பதித்­துள்­ளார். 'ஆகஸ்ட் 16, 1947' படத்­தில் ரேவதி தான் நாயகி.

அறி­மு­கப் படத்­தி­லேயே தனது இயல்­பான நடிப்­பால் ரசி­கர்­க­ளை­யும் கோடம்­பாக்­கத்­தி­ன­ரை­யும் தன் பக்­கம் கவர்ந்­துள்­ளார் ரேவதி.

"தமி­ழ­கத்­தின் மூலை முடுக்­கு­களில் எல்­லாம் இந்­தப் படத்­தின் பாடல்­கள் ஒலிக்­கின்­றன. என் நடிப்­பை­யும் பலர் பாராட்­டு­கின்­ற­னர். என்­னைத் திரை­யில் பார்த்­த­போது முத­லில் எனக்கே வியப்­பாக இருந்­தது. இது நான்­தானா? என்று ஆச்­ச­ரி­யப்­பட்­டேன். அந்த அள­வுக்கு என்னை அழ­காகத் திரை­யில் காட்­டி­யுள்­ளார் ஒளிப்­ப­தி­வா­ளர் செல்­வ­குமார்.

"அவ­ரைப் போலவே ஏ.ஆர்.முரு­க­தாஸ், இயக்­கு­நர் பொன்­குமார் ஆகி­யோ­ருக்­கும் நன்றி சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். எப்­ப­டியோ ரசி­கர்­க­ளுக்­குப் பிடித்த ஒரு படைப்­பில் நானும் பங்­க­ளித்­துள்­ளேன் என்­பதே என் மகிழ்ச்­சிக்­குப் போது­மா­ன­தாக உள்­ளது," என்­கி­றார் ரேவதி.

அதிதி பாலன் இவ­ரது அத்­தைப் பெண். அம்மு அக்கா என்று­தான் பாச­மா­கக் குறிப்­பி­டு­கிறார். அக்­கா­வைப் போன்று தானும் நடி­கை­யாக வேண்­டும் என்று ஆசைப்­பட்­டா­ராம். 'அருவி' படக்­கு­ழு­வி­னர் அடுத்து 'வாழ்' என்ற புதுப் படத்­துக்­காக இணைந்­த­போது, அவர்­க­ளு­டன் இணைய விரும்­பி­னா­ராம்.

"அவர்­கள் நடத்­திய நடிப்­புத் தேர்­வில் கலந்­து­கொண்­டேன். ஆனால் நான் அப்­போது சின்­னப் பெண் என்­ப­தால் அவர்­க­ளால் என்­னைத் தேர்வு செய்ய முடி­ய­வில்லை. அதற்­காக ஆசை­யைக் கைவிட முடி­யுமா... சினி­மா­வில் எனக்­கான வாய்ப்­பு­கள் தேடி­வரும் என நம்­பிக்­கை­யோடு காத்­தி­ருந்­தேன். அந்­தப் பொறு­மை­யும் நம்­பிக்­கை­யும்­தான் இன்று என்னைப் பல கோடி ரசி­கர்­களுக்கு நடி­கை­யாக அறி­மு­கப்­படுத்தி உள்­ளன," என்று சொல்­லும் ரேவ­திக்கு சென்னை தான் சொந்த ஊர். சமை­யல் கலை­யில் மிகுந்த ஆர்­வம் உண்­டாம். அத­னால் அக்­கலை சார்ந்த பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்­டுள்­ளார்.

ரேவ­தி­யின் தந்தை சுனிஷ ஷர்மா, தாயார் லக்கி ஆகிய இரு­வ­ருமே கேர­ளா­வைச் சேர்ந்­த­வர்­கள். ரேவ­தி­யின் சினிமா ஆசைக்கு பெற்­றோர் தரப்­பி­ல் இ­ருந்து எந்­த­வித தடை­யும் இல்லை­யாம்.

"அதிதி அக்கா எனக்கு அத்­தைப் பெண். நடிப்­பின் மீது எனக்கு ஈடு­பாடு வரு­வ­தற்கு அவர்­தான் கார­ணம். மூன்று வய­தி­லி­ருந்தே பரத நாட்­டி­யம் கற்று வரு­கி­றேன்.

"கல்­லூ­ரி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது இணை­யம் வழி ஒரு போட்டி நடை­பெற்­றது. அதற்­காகப் புடவை அணிந்து சிறிய காணொ­ளியைத் தயார் செய்ய வேண்­டி­யி­ருந்­தது. எனது வகுப்­பறைத் தோழி­யின் தந்தை சிறந்த புகைப்­ப­டக் கலை­ஞர். அனைத்­து­லக ஊட­கங்­களில் அவ­ரது படங்­கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன.

"எங்­க­ளு­டைய குடும்ப நண்­ப­ரா­க­வும் மாறி­விட்­டார். அவர்­தான் என்­னைப் புட­வை­யில் பல்­வேறு கோணங்­களில் படம்­பி­டித்­தார். சமூக ஊட­கங்­களில் வெளி­யான அந்­தப் படங்­க­ளைப் பார்த்த இயக்­கு­நர் ஏ.ஆர்.முரு­க­தாஸ் தான் ஆகஸ்ட் 16, 1947 படத்­தின் கதா­நா­ய­கி­யாக என்னை நடிக்க வைக்­க­லாம் என்று இயக்­கு­நர் பொன்­கு­மா­ரி­டம் கூறி­யுள்­ளார்.

"அதன் பிறகு மீண்­டும் ஒரு நடிப்­புத் தேர்­வில் பங்­கேற்­றேன். அவர்­கள் எதிர்­பார்த்­த­து­போல் எனது முக பாவங்­களும் உணர்­வு­பூர்­வ­மான நடிப்­பும் படக்­கு­ழு­வி­ன­ருக்­குப் பிடித்­துப் போனது. கல்­லூ­ரி­யில் முத­லா­மாண்டு படித்­த­போது நடிக்­கத் தேர்­வா­னேன். இப்­போது கல்­லூரி இறு­தி­யாண்­டில் உ ள்ளேன்," என்­கி­றார் ரேவதி.

இவர் வைத்­துள்ள விருப்ப நடி­கர்­கள் பட்­டி­யல் நீள­மாக உள்­ளது. தனு­ஷு­டன் ஒரு­மு­றை­யா­வது இணைந்து நடித்­து­விட வேண்­டும் என்­பதுதான் முதல் இலக்காம்.