'கண்ணீருடன் பாராட்டினர்'

'கண்ணீருடன் பாராட்டினர்'

3 mins read
6e7841eb-c4ab-4e38-a3ec-fae068bdfb05
-

'கண்ணை நம்­பாதே' படத்தை அடுத்து மு.மாறன் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'பிளாக்­மெ­யில்' என்ற படத்­தில் நடித்­துக்கொண்­டி­ருக்­கி­றார் ஸ்ரீகாந்த்.

அரு­மை­யான கதை, அற்­பு­த­மான திரைக்­கதை ஆகி­ய­வற்­றால் தாம் வெகு­வா­கக் கவ­ரப்­பட்­ட­தா­க­வும் தொடர்ந்து பல நாள்­க­ளுக்கு இரவு நேரப் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றது சவா­லான அனு­ப­வ­மாக இருந்­தது என்­றும் அவர் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இரவு படப்­பி­டிப்பு என்­பது நாம் நினைப்­பது போல் அவ்­வ­ளவு எளி­தான விஷ­யமல்ல. இர­வில் கண் விழித்துப் பக­லில் உறங்­கும் பழக்­கம் நம்­மில் பெரும்­பா­லா­னோ­ருக்கு இருக்­காது. எனவே தொடர்ந்து இர­வில் முழு முனைப்­பு­டன் பணி­யாற்­று­வது என்­பது சாதா­ர­ண­மல்ல.

"எனி­னும் இயக்­கு­ந­ரின் திட்­ட­மிட்ட செயல்­பா­டும் படத்­தின் கதை­யும் அனை­வ­ரை­யும் சோர்­வின்றி இயங்க வைத்­தன. இரவு வேளை­யில் வெளிப்­புறப் படப்­பி­டிப்பை நடத்­து­வ­தற்குப் பெரும் பொருள்­செ­லவு ஏற்­படும். மிகப்­பெ­ரிய படக்­கு­ழு­வும் தேவைப்­படும்.

"மேலும், ஒரே கேம­ராவை வைத்து காட்­சி­க­ளைப் பட­மாக்க இய­லாது. ஆங்­காங்கே கேம­ராக்­கள் வைக்­கப்­பட்டு, பர­வ­லாக விளக்கு­களும் பொருத்­தப்­படும். இதை­யெல்­லாம் மன­திற்­கொண்டு சரி­யான நேரத்­தில், உரிய இடத்­தில் வச­னங்­க­ளைப் பேச வேண்­டி­யி­ருக்­கும். மேலும் வச­னங்­க­ளுக்­கேற்ற முக­பா­வ­னை­களும் மிகை­யின்றி இயல்­பாக இருத்­தல் அவ­சி­யம்," என்­கி­றார் ஸ்ரீகாந்த்.

'பிளாக்­மெ­யில்' படத்­தில் ஜி.வி.பிர­காஷ் நாய­க­னாக நடிக்­கி­றார். மேலும் பிந்து மாதவி, தேஜு அஸ்­வின், ஹரி­பி­ரியா, ரமேஷ் திலக், ரெஎ­டின் கிங்ஸ்லி உள்­ளிட்ட பலர் உள்­ள­னர்.

அண்­மைய சில நாள்­க­ளாக ஸ்ரீகாந்த், பிந்­து­மா­தவி சம்­பந்­தப்­பட்ட காட்­சி­க­ளைத்­தான் பட­மாக்கி வந்­த­ன­ராம். சென்னை, ஊட்டி, குன்­னூர், கோவை உள்­ளிட்ட பகு­தி­களில் படப்­பி­டிப்பு நடந்­துள்­ளது.

"ஒவ்­வொரு காட்­சி­யை­யும் பட­மாக்­கும் முன்­னர் இயக்­கு­ந­ரும் ஒளிப்­ப­தி­வா­ள­ரும் என்­னை­யும் பிந்து மாத­வி­யை­யும் அழைத்து ஆலோ­சனை நடத்­தி­னர். இதன் மூலம் பல தவ­று­களும் நேர விரயமும் தவிர்க்­கப்­பட்­டன.

"எல்லா இயக்­கு­ந­ருமே இவ்­வாறு ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­வார் என எதிர்­பார்க்க இய­லாது. ஆனால் இயக்­கு­நர் மாறன் மிக­வும் இனி­மை­யா­ன­வர். படத்­தில் பணி­யாற்­றும் அனை­வ­ருக்­குமே முழு சுதந்­தி­ரம் அளிப்­பார். அத­னால் அவ­ரு­டன் இணைந்து செயல்­ப­டு­வது அரு­மை­யான அனு­ப­வம்," என்று பாராட்டு­கி­றார் ஸ்ரீகாந்த்.

ஊட்டி பகு­தி­யில் படப்­பி­டிப்பு நடை­பெற்­ற­போது வானிலை ரம்­மி­ய­மாக இருந்­த­தாம். அத­னால் வெளிப்­பு­றப் படப்­பி­டிப்­பின்­போது சோர்வு ஏற்­ப­ட­வில்­லை­யாம்.

"குறிப்­பிட்ட ஒரு காட்­சி­யில் நானும் பிந்து மாத­வி­யும் ஒரு காரை வேக­மாக ஓட்டி வந்து ஓரி­டத்­தில் நிறுத்த வேண்­டும். பிறகு காரில் இருந்து இறங்கி பல திசை­களில் ஓடு­வோம். இரு­வ­ரும் பதற்­ற­மா­கக் காட்­சி­ய­ளிப்­ப­து­டன் பல்­வேறு உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்­றார் இயக்­கு­நர்.படப்­பி­டிப்பு நடந்த இடத்­தில் ஏரா­ள­மான ரசி­கர்­கள் திரண்­டு­விட்­ட­னர். இயக்­கு­நர் கூறி­ய­படி இடை­வி­டா­மல் ஓடி, நடித்து முடித்த பிறகு படக்­கு­ழு­வி­னர் மட்­டு­மல்­லா­மல் கூடி­யி­ருந்த பொது­மக்­களும் கைதட்டிப் பாராட்டுத் தெரி­வித்­த­னர்.

"அவர்­களில் சிலர் கண்­ணீர் சிந்­தி­ய­படி கைதட்­டி­ய­தைப் பார்த்து நானும் பிந்­து­வும் நெகிழ்ந்து போனோம். இது போன்ற பாராட்­டு­களும் கைதட்­டல்­களும்­தான் கலை­ஞர்­களைத் தொடர்ந்து இயங்க வைக்­கும்.

"படப்­பி­டிப்­பின் போது கிடைத்த கைதட்­டல்­கள் திரை­ய­ரங்கு­கள் வரை நீடிக்க வேண்­டும் என்­பதே எங்­க­ளு­டைய பிரார்த்­தனை­யாக உள்­ளது," என்­கி­றார் ஸ்ரீகாந்த்.

தற்­போது தமி­ழி­லும் தெலுங்­கி­லும் கவ­னம் செலுத்தி வரு­ப­வர், தமி­ழில் பெரும் பொருள் செல­வில் உரு­வா­கும் இணை­யத் தொடர் ஒன்­றில் நாய­க­னாக நடிக்க இருப்­ப­தா­கத் தக­வல். இது குறித்த அதி­காரப்பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.