தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிமுக இயக்குநரைக் கண்கலங்க வைத்த பாரதிராஜா

2 mins read
db399292-17ea-49ea-bc2a-b89eef118046
-

"அறி­மு­க­ப் படத்­தி­லேயே பார­தி­ரா­ஜாவை இயக்­கும் வாய்ப்புக் கிடைத்­தது என்னுடைய பாக்கி­யம்,'' என்று பூரித்­துப் போகி­றார் ஹரீஷ் பிரபு. அவர் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மாகி உள்ள 'திரு­வின் குரல்' படத்­துக்கு விமர்­சன ரீதி­யில் வர­வேற்புக் கிடைத்­துள்­ளது.

தமி­ழில் பிரம்­மாண்­ட­மான படங்­க­ளைத் தயா­ரித்து வரும் லைக்கா நிறு­வ­னத்­தின் அடுத்த படைப்பு இது. அருள்­நிதி நாய­க­னா­க­வும் ஆத்­மிகா நாய­கி­யா­க­வும் நடித்­துள்­ள­னர். நாய­க­னின் தந்­தை­யாக பாரதி­ராஜா நெகிழ வைக்­கும் வகை­யில் நடித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் ஹரீஷ் பிரபு.

"தொடக்­கத்­தில் 'திரு.குரல்' என்­று­தான் தலைப்பு வைத்­தி­ருந்­தோம். நான் சொல்ல வரும் குரல் திரு­வள்­ளு­வர் எழு­தி­யது அல்ல. கதா­நா­ய­க­னின் பெயர் திரு. அவர், காது கேளாத, வாய்­பேச முடி­யா­த­வர். அத­னால் 'திரு­வின் குரல்' என்று தலைப்பு வைத்­தேன்.

"நாய­க­னின் தந்­தைக்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படு­கி­றார். அங்கு சில சிக்­கல்­களை எதிர்­கொள்­ளும் நாய­கன், அனைத்­தை­யும் சமா­ளித்து எப்படி தந்­தை­யைக் காப்­பாற்றி எப்­படி வீட்­டுக்கு அழைத்து வரு­கி­றார் என்­ப­து­தான் கதை.

"கதைக் கேட்­ட­தும் மருத்­து­வ­ம­னை­யில் இப்­ப­டி­யும் நடக்­குமா என்று வியப்­பும் கவ­லை­யு­மா­கக் கேட்­டார் அருள்­நிதி. மிக­வும் உணர்ச்­சி­வ­சப்­பட்­டார்.

"அவ­ரது தந்­தை­யாக பார­தி­ராஜா நடிக்­கி­றார் என்று சொன்­ன­தும் அவ­ரது ஆர்­வம் மேலும் அதி­க­ரித்­தது. உடனே படத்­தில் நடிக்க சம்­ம­தம் தெரி­வித்­தார்.

"படப்­பி­டிப்பு முடிந்த இரண்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு பார­தி­ரா­ஜா­வுக்கு உண்­மை­யா­கவே உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. மருத்­து­வ­ம­னை­யில் சந்­திக்­கச் சென்­றேன். என்­னைப் பார்த்­த­தும், 'சினி­மா­வுக்­காக என்னை படுக்­கை­யில் தள்­ளி­விட்­டீர்­கள். இப்­போது உண்­மை­யா­கவே நோயா­ளி­யாகிவிட்­டேன்' என்று கிண்­டல் செய்தார். அதைக் கேட்­ட­தும் கண்­க­லங்­கி­விட்­டேன். அவர் நலமடைந்­த­தில் எல்­லா­ருக்­குமே மகிழ்ச்சி," என்­கி­றார் ஹரீஷ் பாபு.