அசத்தும் இல்லத்தரசிகள்

அசத்தும் இல்லத்தரசிகள்

3 mins read

 சூர்யாவின் 42ஆவது படத்துக்கு 'கங்குவா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு இதே தலைப்பில் ரஜினி இந்திப் படம் ஒன்றில் நடித்திருந்தார்.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சாம்பியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராமராஜன். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கி றார். இந்நிலையில் சித்திரைப் புத்தாண்டையொட்டி ராமராஜ னும் படக்குழுவினரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 தனது 50ஆவது படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.

தமிழ்த் திரை­யு­ல­கில் நிறைய நட்­சத்­திர தம்­ப­தி­கள் உள்­ள­னர். அவர்­களில் குறிப்­பி­டத்­தக்க சில தம்­ப­தி­யர் திரு­ம­ணத்­துக்­குப் பிற­கும் சாதித்து வரு­கின்­ற­னர்.

குறிப்­பாக நடி­கை­யாக இருந்து ரசி­கர்­க­ளின் மனம் கவர்ந்த முன்­னணி நாய­கி­கள் சிலர், திரு­ம­ணத்­துக்­குப் பின்­னர் கண­வ­ருக்குப் பக்­க­ப­ல­மாக நிற்­கி­றார்­கள்.

நடிப்பு, இயக்­கம், படத் தயா­ரிப்பு என பல்­வேறு பொறுப்­பு­களை ஏற்று திறம்­ப­டச் செயல்­படும் அவர்­க­ளுக்கு ரசி­கர்­க­ளின் ஆத­ர­வும் தொடர்ந்து கிடைத்து வரு­கிறது.

கோடம்­பாக்­கத்­தில் முன்­னணி நாய­கி­யாக வலம் வந்த சுஹா­சினி, குஷ்பு, ஜோதிகா, நயன்­தாரா உள்­ளிட்­டோர் இப்­போது இல்­லத்­த­ர­சி­க­ளாக இருந்­த­ப­டியே திரை­யு­ல­கி­லும் வெற்­றி­நடை போட்டு வரு­கி­றார்­கள்.

'பாகு­பலி' போன்ற ஒரு படைப்பு தமி­ழில் உரு­வா­க­வில்­லையே' என்ற ஏக்­கத்­தைப் போக்­கி­யுள்­ளது 'பொன்­னி­யின் செல்­வன்' திரைப்­ப­டம். அதன் இரண்­டாம் பாக­மும் விரை­வில் திரை­காண உள்­ளது. வசூல் ரீதி­யில் இந்­தப் படம் பல சாத­னை­க­ளைப் படைக்க, இயக்­கு­நர் மணி­ரத்­னத்­துக்குத் துணை நின்­ற­வர் அவ­ரது மனை­வி­யும் நடி­கை­யு­மான சுஹா­சினி.

"படத்­துக்­கான விளம்­பர திட்­டங்­களை வகுத்­துக் கொடுத்­தது அவர்­தான். அத­னால்­தான் தமி­ழ­கத்­தின் பட்டி தொட்டி மட்­டு­மல்­லா­மல் வெளி­நா­டு­க­ளி­லும் இப்­ப­டத்­தின் முன்­னோட்ட காட்­சித் தொகுப்பு, பாடல்­கள் எல்­லாம் அனைத்து மூலை முடுக்­கு­க­ளை­யும் சென்­ற­டைந்­தன.

"மேலும், படத்­தின் கதை விவா­தம் தொடங்கி, ஒவ்­வொரு காட்­சி­யின் தன்மை குறித்தும் தன் மன­திற்­பட்ட கருத்­து­களை கண­வ­ரு­டன் விவா­தித்­துள்­ளார் சுஹா­சினி.

அனைத்து வகை­யி­லும் அவர் துணை நின்­ற­தால்­தான் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­துக்­கும் முன்பே பல பிரம்­மாண்ட படைப்­பு­க­ளைத் தம்­மால் தர முடிந்­தது என்று மணி­ரத்­னமே கூறி­யுள்­ளார்," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

தமி­ழில் ஜன­ரஞ்­ச­க­மான படங்­க­ளைத் தந்­த­வர்­கள் பட்­டி­ய­லில் இயக்­கு­நர் சுந்­தர்.சிக்கு நிச்­ச­யம் இட­முண்டு. அவர் இயக்­கும் படங்­களை அவ­ரது மனை­வி­யும் நடி­கை­யு­மான குஷ்­புவே அவ்­வப்­போது தயா­ரிக்­கி­றார்.

திரை­யு­ல­கில் தனது வெற்­றிக்­குப் பக்­க­ப­ல­மாக இருப்­பது மனைவி குஷ்­பு­தான் என்று சுந்­தர்.சி.யும் பல­முறை வெளிப்­படை­யா­கக் கூறி­யுள்­ளார். படத் தயா­ரிப்­புப் பணி­களை தன் மனைவி திறம்­ப­ட­வும் திட்­ட­மிட்­டும் மேற்­கொள்­வ­தாக சுந்­தர்.சி. பாராட்­டி­யும் உள்­ளார்.

ஒரு பக்­கம் அர­சி­யல், மறு­பக்­கம் தொழில் நட­வ­டிக்­கை­கள் என இரண்­டி­லும் உரிய கவ­னம் செலுத்தி, குடும்­பத்­தை­யும் வழி­ந­டத்­து­கி­றார் குஷ்பு.

நடி­க­ராகத் தாம் விரும்­பும் கதா­பாத்­தி­ரங்­கள், கதைக் களங்­கள் அமை­யாத பட்­சத்­தில் சொந்­த­மாக படம் தயா­ரித்து அந்த விருப்­பங்­களை நிறை­வேற்­றிக்கொள்­கி­றார் சூர்யா.

அவ­ரது இந்த முயற்­சிக்­குத் துணை நிற்­ப­வர் மனைவி ஜோதிகா. அதே­ச­ம­யம் ஜோதி­கா­வுக்­காக சில படங்­க­ளைத் தயா­ரிக்­க­வும் சூர்யா தவறுவதில்லை. இரு­வ­ரும் இணைந்து வழி­நடத்­தும் படத் தயா­ரிப்பு நிறு­வ­னம் உரு­வாக்­கும் படங்­கள் குறிப்­பி­டத்­தக்க வெற்­றி­க­ளைப் பெற்­று வருகின்றன.

நடி­க­ராக தனது திரைப்­ப­ய­ணத்தை தொடங்கிய ஆர்யா, திரு­ம­ணத்­துக்குப் பிறகு தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் உரு­வெ­டுத்­துள்­ளார். அவ­ரது சொந்­தப் படங்­க­ளைத் தயா­ரிக்க மனைவி சாயிஷா துணை நிற்­கி­றார்.

திரு­ம­ணத்­துக்­குப் பின்னர் ஒரு குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த பிற­கும் சாயிஷா தொடர்ந்து நடித்து வரு­கி­றார். மிக­வும் பிடித்­த­மான கதை, கதா­பாத்­தி­ரங்­களில் மட்­டுமே அவர் நடிப்­பார் என்­றும் அதற்கு தமது ஆத­ரவு எப்­போ­தும் உண்டு என்­றும் கூறு­கி­றார் ஆர்யா.

படத் தயா­ரிப்பு, ஆடை வடி­வ­மைப்பு, கதா­பாத்­தி­ரம் பிடித்­தி­ருந்­தால் நடிப்பு என்று திட்­ட­மிட்­டுச் செயல்­படும் சாயிஷா, நல்ல நட­னக் கலை­ஞ­ரும் ஆவார். அவ்­வப்­போது தனது நட­னக் காணொ­ளி­களை சமூக ஊட­கங்­களில் பகிர்ந்து வரு­கி­றார்.

திரைத்­து­றை­யில் சம்­பா­தித்­ததை மீண்­டும் அதி­லேயே முத­லீடு செய்­யும் ஒரு­சில நடி­கை­களில் நயன்­தா­ரா­வும் ஒரு­வர். இரு­பது ஆண்டு­களாக திரை­யு­ல­கில் வலம் வரும் அவர், கண­வ­ரும் இயக்­கு­ந­ரு­மான விக்­னேஷ் சிவனுடன் இணைந்து படத் தயா­ரிப்பு, விநி­யோ­கம் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

நடிகை ராதிகா சொந்தமாக சின்னத்திரை தொடர்களைத் தயாரித்து நாயகியாக நடிப்பதுடன், படத் தயாரிப்பு நிறுவனத்தையும் வழி நடத்துகிறார். மேலும், பிடித்தமான கதாபாத்திரங்கள் அமையும்போது திரைப்படங்களிலும் ராதிகாவைப் பார்க்க முடியும். அரசியல் களத்திலும் தனது கணவர் சரத்குமாருக்கு பக்கபலமாக உள்ளார்.