'நண்பேன்டா': சந்தானத்தை பாராட்டும் 'காதல்' சுகுமார்

'நண்பேன்டா': சந்தானத்தை பாராட்டும் 'காதல்' சுகுமார்

1 mins read
626eb9c8-023f-43ac-86a2-d1547e70b730
-

நடி­கர் சந்­தா­னம் அடுத்து நகைச்­சுவை நடி­கர் 'காதல்' சுகுமார் இயக்­கும் படத்­தில் நடிக்க உள்­ளார்.

இத்­த­க­வலை பகிர்ந்­துள்ள சுகு­மார், இந்­தப் படம் குறித்த அதி­கா­ர­ப்பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும் எனக் கூறி­உள்­ளார்.

சந்­தா­னத்­தின் நெருங்­கிய நண்­பர்­களில் 'காதல்' சுகு­மா­ரும் ஒரு­வர். ஆறு மாதங்­க­ளுக்கு முன் சந்­தா­னத்தைத் தொடர்­பு­கொண்டு கதைக்­க­ருவை தெரி­வித்­துள்­ளார் சுகு­மார். அதைக்­கேட்­ட­தும் அரு­மை­யாக இருப்­ப­தா­கச் சொன்­னா­ராம் சந்­தா­னம்.

அதன் பின்­னர் கதையை மெரு­கேற்­றிய சுகு­மார், 'வடக்­குப்­பட்டி ராம­சாமி' படத்தின் படப்­பி­டிப்­பில் இருந்த சந்­தா­னத்தை தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு பேசி முழுக் கதை­யை­யும் விவ­ரித்­துள்­ளார்.

"கதை­யைக் கேட்­ட­தும் சந்­தா­னம் வெகு­வா­கப் பாராட்­டி­னார். அதன் பிறகு எனது நண்­பர் ஒரு­வரை தொடர்­பு­கொண்டு பேசி­யுள்­ளார். அப்­போது, 'சுகு­மார் சொன்ன கதை அருமை. அவ­ரது இயக்­கத்­தில் நடிப்­பது எனது கடமை.

"சுகு­மார் நிறைய படங்­களில் பணி­யாற்றி பெரிய இடத்தை அடைய வேண்­டும். சுகு­மார் நன்­றாக இருந்­தால் நாம் அனை­வ­ருமே நன்­றாக இருப்­போம்' என்று சந்­தா­னம் மனம் திறந்து பேசி­யுள்­ளார். அவ­ருக்கு நன்றி," என்­கி­றார் சுகு­மார்.