'இந்தப் பெருமை போதும்'

'இந்தப் பெருமை போதும்'

3 mins read
33efcaab-1284-4085-a275-0949877e872a
-

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளின் மன­தில் இடம்­பி­டிக்க முடிந்­த­தா­கச் சொல்­கி­றார் சோபிதா துலி­பாலா.

முதல் பாகத்­தில் ஒரு பாடல் காட்­சி­யி­லும் திரி­ஷா­வு­டன் ஒன்­றி­ரண்டு வச­னக் காட்­சி­க­ளி­லும் மட்­டுமே இவ­ரைக் காண முடிந்­தது. ஆனால் இரண்­டாம் பாகத்­தில் தமது கதா­பாத்­தி­ரத்­துக்கு உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"திரிஷா, ஐஸ்­வர்யா ராய் என இரண்டு பெரிய கதா­நா­ய­கி­கள் இருக்­கும் படத்­தில் எனக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டாது என்று சிலர் சமூக ஊட­கங்­களில் குறிப்­பிட்­டுள்­ள­னர். ஆனால் இரண்­டாம் பாகத்தைப் பார்த்த பின்பு யாரும் இப்­ப­டிப்­பட்ட கருத்தை வெளிப்­ப­டுத்­த­ மாட்­டார்­கள்.

"ஏனெ­னில், 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் உண்மை­யான கதா­நா­ய­கன் ஜெயம் ரவி என்­றால், அவ­ரைச் சிறு ­வ­யது முதல் காத­லிக்­கும் பெண்­ணாக நடித்துள்ள நான்­தான் கதா­நா­யகி என்று பெரு­மைப்­பட்­டுக் கொள்­ள­லாம்.

"எனி­னும் இது மணி­ரத்­னம் எனும் ஒட்டு­மொத்த இந்­தி­யா­வும் பார்த்து வியக்­கும் இயக்கு­ந­ரின் படைப்பு. இதில் எனக்கு அழகான இள­வ­ரசி கதா­பாத்­தி­ரத்தைத் தந்துள்­ளார். அத­னால் ஏற்­பட்­டுள்ள மன நிறை­வும் முதல் பாகத்­தின் வெற்­றியை இரண்­டாம் பாகம் நிச்­ச­ய­மாக விஞ்­சும் என்­கிற பெரு­மை­யும் மட்­டும் இப்­போதைக்கு எனக்­குப் போதும்," என்­கி­றார் சோபிதா.

இவ­ரது சொந்த ஊர் ஆந்­திர மாநி­லத்­தில் உள்ள தெனாலி நக­ரம். தந்தை பொறி­யா­ளர். தாயார் பள்ளி ஆசி­ரியை. மூத்த சகோ­தரி உள்ளார்.

பெற்­றோர் நன்கு படித்­த­வர்­கள் என்­ப­தால் இரு மகள்­களும் கல்வி­யில் சிறக்க வேண்­டும் என விடா­மல் வலி­யு­றுத்­திக்­கொண்டே இருப்­பார்­கள். சோபி­தா­வின் பள்ளி நாள்­கள் விசா­கப்­பட்­டி­னம் நக­ரில் கழிந்­துள்­ளன. பின்­னர் கல்­லூ­ரிப் படிப்­புக்­காக குடும்­பம் மும்­பைக்கு குடி­பெ­யர்ந்­துள்­ளது.

"அந்­தச் சம­யத்­தில் மும்­பை­யில் நடை­பெற்ற 'மிஸ் இந்­தியா' அழ­கிப் போட்­டி­யில் பங்­கேற்­கு­மாறு தோழி­கள் வற்­பு­றுத்­தி­னர்.

"என் மீது மற்­ற­வர்­கள் நம்­பிக்கை வைக்­கும்­போது, அதை நாம் ஏன் பின்­பற்­றக்­கூ­டாது என்று தோன்­றி­யது.

"2013ஆம் ஆண்டு நடை­பெற்ற 'மிஸ் இந்­தியா' போட்­டி­யில் பங்­கேற்று 'டாப் 20' அழ­கி­களில் ஒரு­வ­ளாக தேர்வு பெற்­றேன். மேலும் 'மிஸ் இந்தியா சவுத்' பட்­டத்­தை­யும் வென்­றேன்.

"அதன் பிறகு மாட­லிங் துறை என்னை ஈர்த்­துக் கொண்­டது. பல்­வேறு ஆடை அறி­முக நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­க­வும் விளம்­ப­ரங்­களில் நடிப்­ப­தற்­கும் வாய்ப்பு­கள் தேடி வந்­தன. அப்­போது எதிர்­பா­ராத வகை­யில் இந்­தி ­இ­யக்­கு­நர் அனு­ராக் கஷ்­யப்­பின் 'ராமன் ராகவ் 2.0' படத்­தின் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­கும் வாய்ப்பு கிடைத்­தது.

"அறி­மு­கப் படத்­தில் நான் சிறப்­பாக நடித்திருந்ததாக எல்­லோ­ரும் பாராட்­டி­னர். கான் திரைப்­பட விழா­வில் சிறந்த நடி­கைக்­கான விரு­துப் பிரி­வில் நான் பரிந்­து­ரைக்­கப்­பட்­டேன். மேலும், கான் விழா­வில் சிவப்­புக் கம்­பள வர­வேற்­பும் பெற்­றேன்.

"அறி­முக நடி­கைக்கு இந்த அள­வுக்கு வர­வேற்பு கிடைப்­பது சாதா­ரண நிகழ்­வல்ல. அனு­ராக் காஷ்­யப் படத்­தில் அறி­மு­க­மான ஒரே கார­ணத்­தால் கிடைத்த அங்­கீ­கா­ரம் இது. கான் விருது கிடைக்­கா­விட்­டா­லும் அங்கே எனக்­குக் கிடைத்த பாராட்­டும் வர­வேற்­பும் நல்ல கதை, கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்வு செய்து நடிக்­கும் நடி­கை­யாக என்னை மாற்­றி­யது என­லாம்," என்று சொல்­லும் சோபிதா, மணி­ரத்­னம் படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு அவ்­வ­ளவு எளி­தில் கிடைத்து­வி­டாது என்­கி­றார்.

தமக்கு நட­னத்­தில் ஆர்­வம் அதி­கம் என்றும் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் இரண்டு பாடல்­களில் அழ­கான அசை­வு­களுடன் நட­ன­மாடி உள்­ளது கூடு­தல் மகிழ்ச்சி அளித்­துள்­ளது என்­றும் சொல்கிறார்.

"திரி­ஷா­வும் ஐஸ்­வர்யா ராயும் திரை­உலகில் நிறைய சாதித்­த­வர்­கள். அவர்­க­ளு­டன் இணைந்து நடித்­தது பெரும் மகிழ்ச்சி அளித்­தது. திரிஷா நிகழ்­கா­லத்­தின் ஒவ்­வொரு கணத்­தை­யும் அனு­ப­வித்து வாழும் அற்­பு­த­மான பெண். படப்­பி­டிப்­புக்கு வெளி­யே­யும் அவரை 'அக்கா' என்றே அழைப்­பேன். அதை அவர் மிக­வும் ரசிப்­பார்.

"ஐஸ்­வர்யா ராய் புக­ழின் உச்­சி­யைத் தொட்­ட­வர். அவ­ரு­டன் இரண்டு முறை மட்­டுமே பேச முடிந்­தது. எனி­னும் அந்த இரு சந்­திப்­பு­க­ளின் மூலம், அவர் உச்­சத்தை தொட என்ன கார­ணம் என்­பதை என்­னால் உணர முடிந்­தது. "அவர் மிக­வும் அடக்­க­மா­ன­வர். ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­துக்­காக தம்மை முழுமை­யாக அர்ப்­ப­ணிக்­கும் உன்­ன­த­மான நடிகை," என்று பாராட்­டித் தீர்க்­கி­றார் சோபிதா துலி­பாலா.