'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'

1 mins read
fde0bf47-7966-46bc-b771-faf51d76ce87
-

'விரு­மாண்டி' படம் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளின் மன­தில் இடம்­பிடித்த அபி­ராமி, தற்போது இணை­யத் தொடர்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

அவர் நடித்­துள்ள 'ஒரு கோடை மர்­டர் மிஸ்­டரி' என்ற இணை­யத் தொடர் ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்­பு­களை ஏற்படுத்தி உள்­ளது.

திடீ­ரென காணா­மல் போகும் கல்­லூரி மாணவி ஒரு­வர் ஏரி­யில் பிண­மாகக் கிடக்­கி­றார். அவ­ரைக் கொலை செய்­தது யார், எத­னால் அந்­தக் கொலை நடந்­தது, இது தொடர்­பான மர்ம முடிச்­சு­கள் எவ்­வாறு அவிழ்­கின்­றன என்­ப­து­தான் கதை­யாம்.

"இது நான் நடித்­துள்ள முதல் இணை­யத்­தொ­டர். பொது­வாக எனக்­குத் திகில் கதை­கள் என்றால் ரொம்­பப் பிடிக்­கும்.

"இத்­தொ­ட­ருக்­காக திற­மை­யான நடி­கர்­கள், தொழில்­நுட்பக் கலை­ஞர்­க­ளு­டன் இணைந்து இருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது. கல்­லூரி, குடும்ப நிகழ்­வு­களை உள்­ள­டக்­கிய தொட­ராக இருக்கும். நான் இரு குழந்­தை­களின் தாயா­க­வும் இளம் விதவை­யா­க­வும் நடித்து இருக்­கி­றேன்.

"இது அனைத்து தரப்பின ருக்கும் பிடித்தமான தொட­ராக இருக்­கும்," என்­கி­றார் அபி­ராமி.

விஷால் வெங்கட் இயக்கும் இத்தொடருக்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் என்.குமார் இசையமைத்துள்ளார்.