திரைத்துறைக்கு இணையாக ஓவியக்கலையில் தமக்கு ஆர்வம் உள்ளதாகச் சொல்கிறார் நடிகை ஷாம்லி.
சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வரும் இவர், அவ்வப்போது ஓவியக் கண்காட்சிகளையும் நடத்தி வருகிறார். அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
"ஷாம்லி தனது ஓவியத்தில் இடம்பெறச் செய்யும் சில கோடுகள், வளைவுகள், வண்ணங்கள் தனித்துவமாக உள்ளன. மேலும், அவரது ஓவியங்களைப் பார்க்கும்போது பெண்கள் தங்களுடைய ஆன்மாவை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உணர்வைப் பெற முடிகிறது," என பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
"இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஓவியம் மீதான ஆர்வம் காரணமாக அமெரிக்காவுக்குச் சென்று ஓவியக்கலையில் பயிற்சி மேற்கொண்டேன். துபாயில் 300 கலைஞர்களுக்கு மேல் பங்கேற்ற கண்காட்சியில் பங்கேற்றேன். மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து திட்டம் ஏதும் இல்லை," என்கிறார் ஷாம்லி.

