தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தங்கலான்' படத்தை நம்பியிருக்கும் விக்ரம்

3 mins read
6fcbc07c-514f-4fee-9df8-82a0218d3bf2
-

'சீயான்' என்று அழைக்­கப்­படும் விக்­ரம் தனி நாய­க­னாக நடித்த அண்­மைய படங்­கள் தோல்வி அடைந்­த­தால் அடுத்த படத்தை கட்டாயம் வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். ­

அத­னால் அவர் இந்­தப் படத்­தின் இயக்­கு­நர் பா.ரஞ்­சித்­தி­டம் காட்­சி­களை விளக்­கும்­படி அடிக்­கடி கேட்­டுக்­கொண்டே இருப்­ப­தால் இரு­வ­ருக்­கும் இடையே பிரச்­சினை வெடித்து இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கிறது.

ரசி­கர்­கள் மத்­தி­யில் தனக்­கென தனி அடை­யா­ளத்தை உரு­வாக்கி வைத்­துள்­ள­வர் நடி­கர் விக்­ரம்.

தன்­னு­டைய கதா­பாத்­தி­ரத்­திற்­காக உயிர்­போ­கும் அள­விற்கு உடலை வருத்தி நடிக்கக் கூடியவர். அண்­மைக்­கா­ல­மாக, மூத்த இயக்­கு­நர்­க­ளை­விட, வளர்ந்து வரும் இயக்­கு­நர்­

க­ளுக்குத் தன்­னு­டைய படங்­களை இயக்­கும் வாய்ப்பைக் கொடுத்து வரு­கி­றார்.

அந்த வகை­யில் இவர் கார்த்தி சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில் நடித்த 'மகான்', இயக்­கு­நர் அஜய் ஞான­முத்து இயக்­கத்­தில் நடித்த 'கோப்ரா' ஆகிய படங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய அளவில் முயற்சி செய்து நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் படு மோச­மான தோல்­வியைச் சந்­தித்­தன.

இறு­தி­யாக விக்­ரம் நடிப்­பில் வெளி­யாகி, ஓர­ள­வுக்கு வர­வேற்பைப் பெற்ற படம் என்­றால் அது 2011ஆம் ஆண்டு வெளி­யான 'தெய்வத் திரு­ம­கள்' திரைப்­ப­டம்­தான்.

இந்­தப் படத்தைத் தொடர்ந்து இவர் நடிப்­பில் அடுத்தடுத்து வெளி­யான, 'ராஜப்­பாட்டை', 'தாண்­ட­வம்', 'ஐ', '10 எண்­ற­துக்­குள்ள', 'இரு­மு­கன்', 'ஸ்கெட்ச்', 'சாமி ஸ்கோ­யர்', 'கடா­ரம் கொண்­டான்', 'மகான்', 'கோப்ரா' போன்ற படங்­கள் தோல்விப் படங்­க­ளாகவே அமைந்­தன.

எனி­னும் சற்று ஆறு­தல்

தரு­வது­போல் பல முன்­னணி நடி­கர்­க­ளின் நடிப்­பில் இயக்­கு­நர் மணி­ரத்­னம் இயக்­கத்­தில் வெளி­யான 'பொன்­னி­யின் செல்­வன்' படம் அமைந்­தது.

இயக்­குநர்­க­ளி­டம் ஒரு வரியை மட்­டுமே கேட்­டு­விட்டு படங்­களில் நடிப்­ப­தால்­தான்

விக்­ரம் நடிக்­கும் படங்­கள் அனைத்­தும் தொடர் தோல்வி அடை­கின்றன என்கின்றனர் அவரது ரசிக்ரகள்.

அத­னால் விக்­ரம் தீவி­ர­மாகக் கதையைக் கேட்ட பின்பு படத்­தில் நடிக்க வேண்­டும் என ரசி­கர்­கள் பல­ரும் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

குறிப்­பாக 'கோப்ரா', 'மகான்' போன்ற படங்­களில் விக்­ரம் ஏன் நடித்­தார் என ரசி­கர்­கள் தங்­க­ளின் ஆதங்­கத்தை வெளிப்­

ப­டுத்தி வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் எப்­ப­டி­யா­வது வெற்­றிப்­ப­டத்தைக் கொடுக்­க­வேண்­டும் என்ற நோக்­கத்­தில் உடலை வருத்தி 'தங்­க­லான்' படத்தில் நடித்து வருகிறார்.

'கேஜி­எப்' பட பாணி­யில்

முப்­ப­ரி­மாண தொழில்­நுட்­பத்­தில் உரு­வாகி வரும் 'தங்­க­லான்' படத்­தில் பல ஆபத்­தான காட்சிகளிலும் வெய்­யில், காடு, மழை, என அலைந்து திரிந்து, உடலை வருத்தி நடித்து வரு­கி­றார்

விக்­ரம்.

இவ்­வ­ளவு முயற்சிகளின் பலனாகப் படம் வெற்­றி­ய­டை­ய­வேண்­டும் என்ற பதற்றத்­தி­லும் பயத்திலும் இருக்கும் விக்ரம் கதையைப் பற்றி பா.ரஞ்சித்திடம் கேட்டது ஒன்றும் தவறில்லை.

"அடுத்­த­டுத்து என்ன காட்சி எடுக்­கப்­போ­கி­றீர்­கள்? எப்­படி எடுக்­கப்­போ­கி­றீர்­கள்? என விக்­ரம் துருவித் துருவி கேள்வி கேட்டிருக்கிறார் விக்ரம்.

"அதனால் கோபம் அடைந்த பா.ரஞ்­சித் சற்று பொங்கி தன்­னு­டைய கோபத்தை வெளிப்­

ப­டுத்தியதாகவும் தக­வல்

கசிந்­துள்­ளது.

இது குறித்து பிர­பல சினிமா விமர்­ச­க­ரான செய்­யாறு பாலு, "நடி­கர் விக்­ரம் கதை கேட்­கும் போதே 100 சந்­தே­கங்­கள்

கேட்­பார். ஆனால் கதை­யைக் கேட்­டு­விட்­டால், இயக்­கு­நரை முழு­தாக நம்பிவிடுவார்.

"நடி­கர் விக்­ரம் இயக்­கு­நரை முழு­வ­து­மாக நம்­பி­ய­தால்

உரு­வான படங்­கள்­தான் 'அந்­நி­யன்', 'ஐ', போன்ற படங்­கள்.

"குறிப்­பாக 'ஐ' படத்­தில் வேறு எந்த நடி­க­ராக இருந்­தா­லும் பாதி­யி­லேயே படப்­பி­டிப்­பில் இருந்து கிளம்பி இருப்­பார்.

"'தங்­க­லான்' படத்­தில் காட்சி­க­ளைப் பற்றி ரஞ்­சித்­தி­டம் விவா­தம் செய்­வதில் இருந்து விக்ரமின் பயம் நமக்குத் தெரிகிறது," எனத் தெரி­வித்­துள்­ளார்.

மேலும் 'தங்­க­லான்' படத்­தின் படப்­பி­டிப்பு கிட்­டத்­தட்ட 60 விழுக்காடு முடிந்­து­விட்ட நிலை­யில் இப்­ப­டத்தை விட்டு விக்­ரம் வெளி­யேற வாய்ப்பு இல்லை என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

இந்த விவ­கா­ரம்­தான்

தற்­போது கோலி­வுட் திரை­யு­ல­கி­னர் மத்­தி­யில் பர­ப­ரப்பை

ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ரசி­கர்­கள் மத்­தி­யில் மிகப்­

பெ­ரிய எதிர்­பார்ப்பை உரு­வாக்­கி­யுள்ள இந்தத் திரைப்­ப­டத்தை, தயா­ரிப்­பா­ளர் ஞான­வேல் ராஜா­வும் இயக்­கு­நர் பா ரஞ்­சித்­தும் இணைந்து தயா­ரிக்­கின்­ற­னர்.

இந்தப் படத்­தில் விக்­ர­மு­டன் பார்­வதி, மாள­விகா மோக­னன், பசு­பதி உள்­ளிட்ட பலர் நடித்­து வருகின்றனர்.

தொடர் தோல்வியால் 'தங்கலான்' படத்தின் காட்சிகளை விவரிக்கச் சொல்லி இயக்குநர் பா.ரஞ்சித்திடம் பிரச்சினை