கதாநாயகியாக நடிப்பதைவிட, விருதுக்கான கதாபாத்திரங்களையே தாம் அதிகம் விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.
மக்கள் மனதில் பதியும் கதாபாத்திரத்தில் நடிப்பதே முக்கியம் என்றும் சம்பளம் என்பது இரண்டாம் பட்சம்தான் என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
'நான் கடவுள் இல்லை', 'பஹிரா' உள்ளிட்ட படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன. நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் 'டிரிங்... டிரிங்...' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நடித்து முடித்திருக்கிறேன்.
"நான் நடித்துள்ள 'கீ' என்ற படமும் வெளியீடு காண உள்ளது. இப்படி வரிசையாக வாய்ப்புகள் கிடைத்து, படங்கள் உரிய நேரத்தில் வெளியீடு கண்டு வந்தாலும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே எனது முதன்மை விருப்பம்.
"மேலும் நடிப்புக்காக தேசிய அளவில் விருதுகள் வாங்கவேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியம்.
"உரிய வாய்ப்புகள் வழங்காமலேயே சவாலான கதாபாத்திரங்களில் இவரால் நடிக்க முடியாது என முத்திரை குத்திவிடக்கூடாது.
"எனினும் எனது விருப்பம் கூடிய விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்," என்கிறார் சாக்ஷி அகர்வால்.

