நடிகை சமந்தாவின் தீவிர ரசிகரான தெனாலி சந்தீப் என்பவர் ஆந்திராவின் விஜயவாடா நகரில் அவருக்குக் கோவில் கட்டியுள்ளார்.
ஓர் அறக்கட்டளை மூலம் சமந்தா பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருவதை அறிந்தபோது அவர் மீதான மதிப்பு கூடியதாகச் சொல்கிறார் சந்தீப்.
"இந்தக் காரணத்தால்தான் அவருக்கு கோவில் கட்ட தீர்மானித்தேன்.
இதற்கென தனி நிலம் வாங்காமல், எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோவில் கட்டினேன். குடும்பத்தாரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினர்," என்கிறார் சந்தீப்.
இதனிடையே நேற்று இந்தக் கோவிலின் திறப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
ரசிகர்களின் அன்பு சமந்தாவை நெகிழ வைத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

