இந்திப் படங்கள், தென்னிந்திய படங்கள் என்ற மொழி பேத சர்ச்சை தேவையற்றது என்கிறார் அதிதி ராவ்.
தன்னைப் பொறுத்தவரை இத்தகைய பேதங்கள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"உண்மையில் சினிமாவிற்கு மொழி பேதமே இல்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
"நம் மக்களுக்காக திரைப்படங்களை உருவாக்குகிறோம். எந்த மொழிப் படைப்பாக இருந்தாலும், அதன் நோக்கம் என்பது ரசிகர்களை மகிழ்விப்பதுதான்.
"ஒவ்வொரு படத்தையும் ஏற்கும்போது இதைத்தான் மனதில் நினைத்துக்கொள்கிறேன்.
"ரசிகர்களைப் பொறுத்தவரை மொழி பேதம் பார்ப்பதில்லை. நல்ல படைப்புகள் என்றால் உலகின் எந்த மூலையாக இருந்தாலும் உரிய வரவேற்பு கிடைக்கும்," என்கிறார் அதிதி ராவ்.
அதிதியும் நடிகர் சித்தார்த்தும் காதல் வயப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதை அதிதி தவிர்த்துவிடுகிறார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் விவாதிப்பதை விரும்பவில்லை என்கிறார் அதிதி. உரிய நேரம் வரும்போது திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.

