விஜய்க்காக இரண்டு கதைகளைத் தயார் செய்துள்ளதாகவும் அதை விஜய்யிடம் நேரடியாக தெரிவித்தபோது, 'என் நண்பருக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா' என்று அவர் கூறியதாகவும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.
தற்போது 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்நிலையில், இப்படக்குழுவினர் விஜய்யை சந்தித்தனர்.
அப்போது படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை பார்த்துள்ளார் விஜய். பின்னர் படக்குழுவினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
"இயக்குநராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது 'துப்பறிவாளன் 2' படம் மூலம் நிறைவேறி உள்ளது. தொடர்ந்து படங்கள் இயக்க ஆர்வமாக உள்ளேன்.
"உங்களுக்கும் இரண்டு கதைகள் தயார் செய்துள்ளேன் என்றும் விஜய்யிடம் தெரிவித்தபோது, அவர் சிறு தயக்கமும் இன்றி, 'நீ வா நண்பா... நான் இருக்கிறேன். சேர்ந்து பயணிப்போம்' என்று சொன்னார்.
"விஜய் அப்படிச் சொன்ன தைக் கேட்டு நான் நெகிழ்ந்து போனேன்," என்கிறார் விஷால்.

