அதிதி: நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்

அதிதி: நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்

1 mins read
d2a4002c-6f16-4fa2-bb07-358d9348a33b
-

'அருவி' படத்­திற்குப் பிறகு தங்கர் ­பச்­சான் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'கரு­மே­கங்­கள் கலை­கின்­றன' படத்தில் நாய­கி­யாக நடித்­துள்­ளார் அதிதி பாலன். பார­தி­ராஜா, யோகி பாபு, கௌதம் மேனன் உள்­ளிட்ட பலர் இப்­படத்­தில் நடித்­துள்­ள­னர்.

"இந்­தப் படத்­தில் கண்­மணி எனும் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளேன். பல கஷ்­டங்­களை அனு­ப­வித்த ஒரு பெண்­ணுக்கு திடீ­ரென ஒரு மிகப்­பெ­ரிய பொறுப்பு கிடைக்­கும்­போது அவள் என்ன செய்­கி­றாள் என்­பதே இப்­ப­டத்­தின் கதை. ஒரு பெண்­ணுக்­கும் ஒரு குழந்­தைக்­கும் இடை­யே­யான உற­வைச் சித்­தி­ரிக்­கும் கதை என்­றும் சொல்­ல­லாம்.

"தங்­கர்­பச்­சா­னின் வழக்­க­மான குடும்­பம், மனி­தர்­க­ளின் உணர்­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட கதை இது. திரை­யு­ல­கில் பழுத்த அனு­ப­வம் உள்­ள­வர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைத்­தது. அதை நல்­ல­வி­த­மா­கப் பயன்­படுத்­திக்கொண்­டேன். குறிப்­பாக, இயக்­கு­நர் பார­தி­ராஜா சில நுணுக்­கங்­களை எனக்கு அழ­காக சொல்­லிக்கொடுத்­தார்.

"நான் அடிப்­ப­டை­யில் வழக்­கறி­ஞர். ஆனால் நடிக்க வந்த பிறகு அத்­தொ­ழி­லில் நீடிக்க முடி­ய­வில்லை. இப்­போ­தைக்கு நடிப்­பு­தான் எனது முதல் இலக்கு என்­றா­லும் வழக்­க­றி­ஞர் பணியைக் கைவிட மாட்­டேன்.

"தொடர்ந்து ஒரே மாதிரியான பாத்­தி­ரங்­கள் அமைந்­தன. அனைத்­து­வி­த­மான பாத்­தி­ரங்களி­லும் நடிக்க விரும்­பி­ய­தால் பல வாய்ப்­பு­களை ஏற்­க­வில்லை," என்­கி­றார் அதிதி.