தனது மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சென்னையில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார் நடிகர் விஜய்.
அப்போது தனது நெஞ்சில் கையெழுத்திடுமாறும் விஜய் என்ற பெயரை பச்சை குத்திக் கொள்ளப் போவதாகவும் கூறிய ரசிகரிடம், அவ்வாறு செய்யக்கூடாது என்று அவர் அறிவுரை கூறினார்.
"இதுபோல் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்துங்கள். அதுதான் முக்கியம்.
"பிறர்க்கு உதவி செய்ய போதுமான பணம் இல்லையெனில் நிர்வாகிகள் தயக்கமின்றி என்னை அணுகலாம். என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்," என்றார் விஜய்.
மேலும் மக்களுக்கு உதவ புதிய நலத்திட்ட உதவிகள் குறித்து இயக்க நிர்வாகிகள் யோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகத் தகவல்.

