'காத்திருந்து சாதித்தேன்'

'காத்திருந்து சாதித்தேன்'

3 mins read
9b44e8b1-596f-4d3e-989f-bd3dd5da4593
-

ஓடிடி தளங்­க­ளின் வரு­கை­யால் தமிழ்த் திரை­யு­ல­கில் நாள்­தோ­றும் புதுப்­புது கதா­நா­ய­கி­கள், கலை­ஞர்­கள் அறி­மு­க­மான வண்­ணம் உள்­ள­னர். அந்­தப் புது­மு­கங்­க­ளின் வரி­சை­யில் அண்­மை­யில் இணைந்­துள்­ளார் ஷாலி நிவே­காஸ்.

சின்­னத்­திரை நிகழ்ச்­சித் தொகுப்­பா­ள­ராக ரசி­கர்­க­ளுக்கு அறி­மு­க­மான ஷாலி, 'மிஸ் சென்னை' அழ­கிப் பட்­டம் வென்­ற­வர். அண்­மை­யில் இவர் நடித்த 'செங்­க­ளம்' படம் ஓடிடி தளத்­தில் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றது. இதை­ய­டுத்து சூட்­டோடு சூடாக தேடி வந்த சில வாய்ப்­பு­களை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்.

எனி­னும் இந்த வர­வேற்­பை­யும் வெற்­றி­யை­யும் தன்­னால் மன­தா­ரக் கொண்­டாட முடி­ய­வில்லை என சோகத்­து­டன் சொல்­கி­றார் ஷாலி.

கார­ணம், இவ­ரது நெருக்­க­மான தோழி எதிர்­பா­ரா­த­வி­த­மாக மர­ண­ம­டைந்­து­விட்­டா­ராம். அடுத்து ஷாலி­யின் உடன்­பி­றந்த சகோ­தரி விபத்­தில் சிக்­கி­னார். இப்­படி அடுத்­த­டுத்து நிகழ்ந்த சில சம்­ப­வங்­கள் முடக்­கிப் போட்ட நிலை­யில், அதி­லி­ருந்து மெல்ல மீண்டு வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"திரை­யு­ல­கில் பணி­யாற்ற வேண்­டும் என்­பது சிறு வயது முதலே என் மன­தில் ஆழ­மா­கப் பதி­விட்ட ஆசை. நடிப்­பில் சாதிக்க வேண்­டும் என விரும்­பி­னேன். அடிப்­ப­டை­யில் நான் ஒரு பர­தக் கலை­ஞர். முறைப்­படி நட­னம் கற்­றுக்­கொண்­டேன்.

"ஒரு நாட்­டிய நாட­கத்தை அரங்­கேற்றி முடித்­த­தும், நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த ஒரு பாட்­டி­யும் பேத்­தி­யும் நட­னத்தை வெகு­வா­கப் பாராட்­டி­னர். அப்­போ­து­தான் நடிப்பு என்­பது பிற­ரு­டைய மன­தில் எந்த அள­வுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்­பது புரிந்­தது. ஒரு­வ­கை­யில் வியப்­பா­க­வும் இருந்­தது. அன்று கிடைத்த அந்­தப் பாராட்­டுக்­குப் பிறகு எனது நடிப்­பாசை பல மடங்கு கூடி­யது," என்­கி­றார் ஷாலி. எனி­னும் ஆசைப்­பட்­ட­து­போல் நடி­கை­யா­வது அவ்­வ­ளவு எளி­தாக இல்­லை­யாம். கார­ணம், ஷாலி­யின் இந்த ஆசைக்கு அவ­ரது வீட்­டில் யாரு­டைய ஆத­ர­வும் கிடைக்­க­வில்லை.

"திரை­யு­ல­குக்­கும் எனது குடும்­பத்­துக்­கும் வெகு தூரம். மிகுந்த கட்­டுப்­பா­டு­க­ளு­டன் வளர்க்­கப்­பட்­டேன். எனி­னும் முகத்­தில் அடித்­தாற்­போல் நடந்­து­கொள்­ளா­மல் ஒரு நிபந்­தனை விதித்­த­னர்.

"'உன் பெய­ருக்­குப் பின்­னால் குறிப்­பி­டு­வது போல் ஒரு பட்­டப்­ப­டிப்பை முடித்­து­விடு. அதன் பிறகு ஒரு வேலை­யில் சேர்ந்து கைநி­றைய சம்­ப­ளம் வாங்­கிய பிற­கும் நடி­கை­யா­கும் ஆசை இருந்­தால், தாரா­ள­மாக நடிக்­க­லாம்' என்­ற­னர்.

"இது போதாதா, பெற்­றோர் ஆசைப்­படி பொறி­யி­யல் படிப்பை முடித்­தேன். பிறகு பெங்­க­ளூ­ரில் மூன்று லட்­சம் ரூபாய் ஊதி­யத்­து­டன் ஒரு வேலை அமைந்­தது. இதைச் சாதித்த பிறகு வீட்­டில் எந்­த­வித தடை­யும் இல்லை. முந்­திய நிலைக்கு நேர்­மா­றாக என் பெற்­றோரே நான் நடி­கை­யாக முழு ஆத­ரவை வழங்­கி­னர். இப்­படி காத்­தி­ருந்து சாதித்­தேன்," என்று ஆஸ்­கார் விருது பெற்­ற­தற்கு இணை­யாக உற்­சா­கத்­து­டன் விவ­ரிக்­கி­றார் ஷாலி.

இவர் தொலைக்­காட்­சி­யில் தொகுத்து வழங்­கிய 'வணக்­கம் தமிழா' என்ற நிகழ்ச்­சிக்கு பலத்த வர­வேற்பு கிடைத்­தது. அதன் தொடர்ச்­சி­யாக 'செங்­க­ளம்' பட வாய்ப்பு கிடைக்க, தயக்­க­மின்றி ஏற்­றுக் கொண்­டா­ராம்.

நடிப்­புத் தேர்­வின்­போது 'அர­சி­ய­லில் பழம் நழுவி விழும் எனக் காத்­துக்­கொண்­டி­ருந்­தால் வேலைக்கு ஆகாது' என்ற வச­னத்­தைப் பேசு­மாறு இயக்­கு­நர் பிர­பா­க­ரன் கூறி­யுள்­ளார். அந்த வச­னம்­தான் கதையை நகர்த்­திச் செல்­லும் அள­வுக்கு முக்­கி­ய­மா­னது என்­ப­தைப் புரிந்­து­கொண்­ட­தா­க­வும் தாம் அதைப் பேசி நடித்­தது இயக்­கு­ந­ருக்­குப் பிடித்­துப்­போ­ன­தா­க­வும் சொல்­கி­றார்.

"'செங்­க­ளம்' படத்­தைப் பார்த்­து­விட்டு பல­ரும் பாராட்­டி­னர். நீண்ட வச­னங்­க­ளைக் கூட சர்வ சாதா­ர­ண­மா­கப் பேசி­யி­ருக்கி றீர்­கள் என்று கூறி­னர். இந்­தப் பாராட்­டு­கள் எல்­லாம் இயக்­கு­நர் எஸ்.ஆர்.பிர­பா­க­ரன் சாருக்­குத்­தான் போய்ச் சேரும். அவர்­தான் நான் எப்­படி கதா­பாத்­தி­ரத்தை உள்­வாங்­கிப் பேச வேண்­டும் என்­ப­தைச் சொல்­லிக் கொடுத்­தார்," என்று சொல்­லும் ஷாலி, அடுத்து இளை­ய­ராஜா இசை­யில் உரு­வா­கும் 'பேரன்­பும் பெருங்­கோ­ப­மும்' படத்­தில் நடிக்­கி­றார். இது பாலு மகேந்­தி­ரா­வின் மாண­வர் சிவப்­பி­ர­காஷ் இயக்­கத்­தில் உரு­வா­கும் படம். "தமி­ழ­கத்­தில் நிக­ழும் ஆண­வக் கொலை­க­ளைக் கண்­டிக்­கும் கதைக் கரு­வு­டன் உரு­வா­கிறது. இதி­லும் கதையை நகர்த்­திச் செல்­லும் அழுத்­த­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றேன். ஆனந்த் அண்ணா மலை இயக்­கும் 'காகங்­கள்' படத்­தி­லும் முக்­கிய கதா­பாத்தி ரத்தை ஏற்­றுள்­ளேன்.

"என் நடிப்­புத் திற­மைக்கு சவால் விடக்­கூ­டிய எத்­த­கைய கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் தயக்­க­மின்றி நடிப்­பேன். சுருக்­க­மாச் சொல்­வ­தாக இருந்­தால் 'பெண் விஜய் சேது­பதி' என்று பெய­ரெ­டுக்க ஆசை," என்­கி­றார் ஷாலி.

, :

தமிழகத்  