சம்யுக்தா: நாயகியையும் முன்னிலைப்படுத்துக

சம்யுக்தா: நாயகியையும் முன்னிலைப்படுத்துக

1 mins read
795a0b33-1ea6-4572-b739-e650d7e8ca03
-

இயக்­கு­நர்­களும் தயா­ரிப்­பா­ளர்­களும் கதா­நா­ய­கி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும் என்­கி­றார் சம்­யுக்தா மேனன்.

முன்­னணி கதா­நா­ய­கர்­க­ளி­டம் இதை ஒரு கோரிக்­கை­யாக தாம் முன்­வைப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சம்­யுக்தா நாய­கி­யாக நடித்­துள்ள 'விரூ­பாக்‌ஷா' தெலுங்­குப் படம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. இதற்­கான நன்றி தெரி­விக்­கும் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது, திரை­யு­ல­கில் கதா­நா­ய­கி­க­ளுக்கு எந்த வகை­யி­லும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டா­தது தமக்கு வருத்­தத்தை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"ஒரு படத்­தில் நாய­க­னுக்கு முக்­கி­யத்­து­வம் உள்­ளதா என்று கேட்க வேண்­டிய அவ­சி­யமே இல்லை. அது­போல் கதா­நா­ய­கி­க­ளின் நிலை­யும் உயர வேண்­டும். நாய­கி­க­ளுக்கு நூறு விழுக்­காடு முக்­கி­யத்­து­வம் இல்லை என்­றா­லும் சரி­பாதி அள­வுக்­கே­னும் நாய­கி­களை கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்.

"அனைத்து மொழி­க­ளி­லும் திற­மை­யான நடி­கை­கள் உள்­ள­னர். இதை அனை­வ­ரும் நினை­வில் கொள்ள வேண்­டும்," என்­கி­றார் சம்­யுக்தா.