'பெரிய ஆசைகள் இல்லை'

'பெரிய ஆசைகள் இல்லை'

3 mins read
a163149d-aefb-4139-9da8-e84103c0ee40
-

மலை­யா­ளத் திரை­யு­ல­கில் உடை­யலங்­கார நிபு­ண­ராக முத்­திரை பதித்த அக்­‌ஷயா பிரேம்­நாத் நடி­கை­யாக மாறி உள்­ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடி­கர் மம்­முட்டி நடிப்­பில் வெளி­யான 'ஒன்' படத்­தின் மூலம் உடை­ய­லங்­கார கலை­ஞ­ராக அறி­மு­க­மாகி, பிறகு பத்­துக்­கும் மேற்­பட்ட படங்­களில் பணி­யாற்­றி­ய­வர், 'மை டியர் டயானா' இணை­யத்­தொ­ட­ரில் நாய­கி­யாக அறி­மு­க­மா­கி­றார். இதில் நடிகை ஐஸ்­வர்யா ராஜே­ஷின் சகோ­த­ரர் மணி­கண்­டன் தான் கதா­நா­ய­க­னாம்.

"வித­வி­த­மான உடை­களை வாங்­கு­வது, வடி­வ­மைப்­பது என்­றி­ருந்த நான் இப்­போது நடி­கை­யா­கி­விட்­டேன். அதி­லும் தமி­ழில் அறி­மு­க­மா­கி­றேன் என்­பது இரட்­டிப்பு மகிழ்ச்சி தரு­கிறது. "கல்­லூ­ரி­யில் படிக்­கும்­போதே 'ஓம் சாந்தி ஓஷனா' என்ற மலை­யா­ளப் படத்­தில் நடித்­தி­ருக்­கி­றேன். பிற­கு­தான் உடை­ய­லங்­கார நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றத் தொடங்­கி­னேன்.

"நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் நடிப்­புத் திற­மையை வெளிப்­ப­டுத்­தும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. அதை நல்­ல­வி­த­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளேன்," என்­கி­றார் அக்­‌ஷயா.

இவ­ரது சொந்த ஊர் கொச்­சின். அப்பா பிரேம்­நாத் கைத்­த­றித் துணி விற்­ப­னைத் தொழி­லில் ஈடு­பட்­டுள்­ளார். பூர்­வீ­கம் கன்­னி­யா­கு­மரி.

"கொச்­சின்­தான் அம்மா பிறந்து வளர்ந்த இடம். அங்கே பள்ளி ஆசி­ரி­யை­யாக இருந்­த­வர். எனக்கு அண்­ணன் இருக்­கி­றார்.

"பட்­டப்­ப­டிப்பை முடித்­துள்­ளேன். சிறு வய­தில் இருந்தே நட­னத்­தில் ஆர்­வம் இருந்­தது. பள்­ளி­யில் நிறைய நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­பேன். அப்­போ­து­தான் 'ஓம் சாந்தி ஓஷனா' படத்­துக்­கான நடிப்­புத் தேர்வு நடை­பெற்­றது. அதில் பங்­கேற்ற பின்­னர் வாய்ப்பு கிடைத்­தது. அதில் நிவின் பாலி, நஸ்­‌ரியா, வினித் சீனி­வா­சன் எனப் பல­ரும் நடிச்­சி­ருந்­தாங்க. நான் நஸ்­‌ரியா தோழி­யாக நீத்து என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தேன்.

"எனி­னும் அந்­தப் படத்­தில் நடித்து முடித்­த­தும் படிப்­பில் கவ­னம் செலுத்­து­மாறு அம்மா அறி­வு­றுத்­தி­னார். அது எனக்­கும் சரி­யா­கப்­பட்­டது. இன்­று­வரை என்­னைச் சிறப்­பாக வழி­ந­டத்தி வரு­வது அம்­மா­தான். அத­னால் அவர் சொன்­ன­ப­டியே ஃபேஷன் தொழில்­நுட்­பம் தொடர்­பாக பட்­ட­மேற்­ப­டிப்பை முடித்­தேன்.

"அப்­போது என்­னு­டன் படித்த பலர் பெரிய நிறு­வ­னங்­களில் பணி­யாற்­று­கி­றார்­கள். ஆனால், என்­னு­டைய விருப்­பம் திரை­யு­ல­கில் உடை­ய­லங்­கார, ஆடை வடி­வ­மைப்­பா­ள­ராக வேண்­டும் என்­ப­து­தான். அந்த அள­வுக்கு இத்­து­றை­யில் ஆர்­வ­மாக இருந்­தேன்.

தற்­போது 'ஹேஷ்­டாக் ஹோம்' 'பிரம்­மம்' என வரி­சை­யா­கப் பல படங்­களில் நடித்­துள்­ளா­ராம். வாய்ப்பு கிடைக்­கும்­போது ஆடை அலங்­கார நிபு­ண­ரா­க­வும் பணி­யாற்­று­கி­றா­ராம். தாம் வடி­வ­மைத்த உடை­க­ளின் விளம்­ப­ரத்­தில் தாமே நடித்­தும் உள்­ளார்.

"மலை­யாள நடி­கர் திரு.சுரேஷ்­கோபி நடிப்­பில் வர­வுள்ள 'ஒற்­றக்­கொம்­பன்' படத்­தில் ஆடை அலங்­கார நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றி­னேன். 'மகா­வீர் கர்ணா' படத்­துக்­காக விக்­ரம் சாருக்­கும் ஆடை­கள் வடி­வ­மைத்­தேன். நான் வடி­வ­மைத்த உடை­க­ளு­டன் காணப்­படும் எனது புகைப்­ப­டங்­க­ளைப் பார்த்த பல­ரும் 'நீங்­களே நடிக்­க­லாமே' என்று ஆலோ­சனை வழங்­கி­னர். அது­தான் என்னை நடிக்­கத் தூண்­டி­யது.

"புதுப் படம் ஒன்­றில் நடி­கர் யோகி பாபு­வுக்­கான உடை­க­ளை­யும் நான்­தான் வடி­வ­மைத்­தேன். நடிப்­பும் உடை­ய­லங்­கா­ர­மும் எனக்­குப் பல­வ­கை­யி­லும் பெய­ரை­யும் புக­ழை­யும் பெற்­றுத் தரு­கின்­றன. மொத்­தத்­தில் சொல்­வ­தா­னால் வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்­சி­யை­யும் மன­நி­றை­வை­யும் தந்­துள்­ளது.

"நல்ல நடிகை என்று பெய­ரெ­டுத்­தால் போதும். வேறு பெரிய ஆசை­கள் ஏதும் எனக்கு இல்லை. திரைத்­து­றை­யில் பணி­யாற்ற வேண்­டும் என்ற கனவு நன­வா­கி­யுள்­ளது. அந்த மன­நி­றை­வு­டன் இருப்­ப­தால் இத்­து­றை­யில் எனக்­கென இலக்­கு­களை வகுத்­துக் கொள்­ள­வில்லை. எனி­னும் எதிர்­கா­லம் சில கணக்­கு­க­ளைப் போட்டு வைத்­தி­ருக்­கக்­கூ­டும். எனவே எல்­லாம் மாறக்­கூ­டும்," என்­கி­றார் அக்­‌ஷயா.