தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் எழுத்தாளரின் கதை திரைப்படமாகிறது

1 mins read
168d9978-8f10-482a-a723-512522ac46b7
-

'ஆந்தை' என்ற தலைப்­பில் உரு­வா­கும் திரைப்­ப­டத்­துக்கு சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் மில்­லத் அகமது கதை, திரைக்­கதை, வச­னம், பாடல்­கள் எழு­தி­யி­ருக்­கி­றார்.

"இரவு என்­ற­வு­டன் நமக்கு நினை­வுக்கு வரு­வது ஆந்தை. மேலும் அப­ச­கு­ணம் கொண்ட பறவை என்­றும் கூறு­வர். ஒரே இர­வில் நடக்­கும் பல திருப்பங்­களைக் கொண்ட சம்­ப­வங்­களை விவ­ரிக்­கும் திகில் கதை இது.

"இத்­தி­ரைப்­ப­டத்­தின் படப்­பிடிப்பு காஷ்­மீர், டெல்லி, அறந்­தாங்கி, பொள்­ளாச்சி ஆகிய இடங்­களில் நடை­பெற்­றது.

"இதில் விகாஷ் கதா­நா­ய­க­னா­க­வும் யாழினி கதா­நா­ய­கி­யா­க­வும் நடிக்­கின்­ற­னர். மேலும், மதன்­பாப், பயில்­வான் ரங்­க­நா­தன், ராகுல் தாத்தா ஆகியோரும் உள்­ள­னர்.

"'என் சங்­கத்து ஆள அடிச்­ச­வன் எவன்டா' என்ற நகைச்­சுவைத் திரைப்­ப­டத்தை இயக்கிய நவீன் மணி­கண்­டன், 'ஆந்தை' திரைப்­ப­டத்தை இயக்கி, ஒளிப்­ப­தி­வும் செய்­கிறார்.

"எஸ்.ஆர்.ராம் இசை­ய­மைக்­கி­றார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி­ய­ள­வில் திரைப்­பட இயக்­கு­நர், திரைக்­கதை ஜாம்­ப­வான் திரு. கே. பாக்­ய­ராஜ் 'ஆந்தை' திரைப்­படத்தின் முதல் தோற்­றச் சுவரொட்­டியை வெளி­யிட்­டார்," எனப் படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்தனர்.