கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
அவ்வாறு நடந்தால்தான் தமிழ்த் திரையுலகம் உண்மையாகவே வளர்ச்சி அடைந்ததாக அர்த்தம்," என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகம் மட்டுமல்லாது எந்த விவகாரமாக இருந்தாலும் அதுகுறித்து துணிச்சலாக கருத்துகளை தெரிவிக்கக்கூடியவர் ஐஸ்வர்யா.
தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்கள், கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
தன்னை மையப்படுத்தி உருவாகும் சர்ச்சைகள் குறித்தெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. இளம் வயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாக நடிப்பது குறித்து அண்மையில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, கதை பிடித்திருந்தால் நூறு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்கவும் தாம் தயாராக இருப்பதாக அதிரடிப் பதிலை அளித்தார்.
தொடர்ச்சியாக அழுத்தமான கதைகள், பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்களே என்று கேள்வி எழுப்பினால், அழகான புன்சிரிப்புதான் ஐஸ்வர்யாவின் முதல் பதிலாக வெளிப்படுகிறது.
"அப்படியெல்லாம் எதுவும் முடிவெடுத்து செயல்படுவதில்லை. சர்ச்சைக்குள்ளாகும் விவகாரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது எனது முடிவல்ல. அதேசமயம் நான் நடித்த ஒரு திரைப்படம் சர்ச்சைக்கு ஆளாகிறது எனில் அதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல.
"என்னைத் தேடி வரும் இயக்குநர்கள் கூறும் கதைகளைக் காதுகொடுத்துக் கேட்கிறேன். அந்த கதையில் என்ன இருக்கிறது, எனது பங்களிப்பு ரசிகர்களால் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும், அந்தக் கதையும் அதை வைத்து உருவாகும் படமும் ரசிகர்களிடம் எப்படிப் போய்ச் சேரும் என்று யோசிப்பேன். இதற்கு முன்பு 'இந்தியன் கிச்சன்' படத்தில் நடித்தேன். அதைப் பார்த்த இந்திய இயக்குநர் ஒருவர் என்னை வெகுவாகப் பாராட்டினார். ரசிகர்களும் பாராட்டத் தயங்கவில்லை.
"என் வீட்டில் நானே இப்படித்தான் நடந்துகொள்கிறேன். உங்களுடைய இயல்பான நடிப்பு பல விஷயங்களை எனக்கு உணர்த்துகிறது. மனதளவில் என்னை வெகுவாகப் பாதித்தது.
"பெரிய இயக்குநர் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாகப் பேசிப் பாராட்டுவது என்பது திரையுலகில் பெரிய விஷயம்தான். இப்படி ஒரு படம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியம்," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சோகமான கதாபாத்திரங்களை மட்டுமே தாம் தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுவதை மறுப்பவர், தேடி வரும் கதைகளில் பிடித்தமானவற்றைத் தேர்வு செய்வதாகச் சொல்கிறார்.
"சோகமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குவது நான் அல்ல. இயக்குநர்கள்தான் அப்படிப்பட்ட கதைகளுடன் என்னிடம் வருகிறார்கள். ஒருவேளை நகைச்சுவையான, ஜனரஞ்சகமான கதைகள் அதிக எண்ணிக்கையில் தேடிவந்தால், அவற்றில் நடிக்கவும் நான் தயாராக உள்ளேன்.
"மற்ற கதாநாயகிகள் போல் எனக்கும் காதல் பாடல்களைப் பாடி, நாயகர்களுடன் நடனமாடும் ஆசை உள்ளது. ஆனால் இயக்குநர்கள் என்னை அப்படிப் பார்க்க விரும்பவில்லை எனும்போது நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி நிறைய படங்கள் வரவேண்டும். பெண்களை வைத்து சொல்லப்பட வேண்டிய கதைகள் ஏராளமாக உள்ளன. இன்றைய சூழலுக்கு அப்படிப்பட்ட படங்கள் உருவாக வேண்டியது அவசியம்.
"எனக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறும் நாயகியாக நடிக்க ஆசை. சரித்திரப் பின்னணியில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற விருப்ப மும் உள்ளது. ஒரு படம் முழுவதும் பயங்கர வில்லத்தனம் செய்யும் நாயகியாகவும் அம்மன் கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா.
, :
தமிழகத்

