இணையத் தொடரில் அதர்வா

1 mins read
68265333-ddb5-4306-9150-7090ca461339
-

புதிய இணை­யத் தொட­ரில் நடிக்கி­றார் அதர்வா. பிர­சாத் முருகேசன் இயக்­கும் இத்­தொ­ட­ருக்கு 'மத்­த­கம்' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர்.

"மத்­த­கம் என்­பது யானை­யின் முன் நெற்­றி­யைக் குறிக்­கும் சொல் ஆகும். யானை தன் தும்­பிக்கை இணைந்த மத்­த­கத்தை தன்னை காத்­துக்­கொள்­ள­வும் தாக்­க­வும் பயன்­ப­டுத்­தும்.

"முப்­பது மணி நேரத்­தில் நடக்­கும் பர­ப­ரப்­பான சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பு­தான் கதை. இதை இயன்­ற­வரை சுவ­ரா­சி­ய­மாக சொல்ல முயற்சி செய்­கி­றோம்.

"நாய­க­னுக்­கும் வில்­ல­னுக்­கும் ஓர் இர­வில் நடக்­கும் ஆடு­புலி ஆட்­டத்தைப் படம்பிடித்­தது சவா­லா­ன­தாக இருந்­தது. இப்­ப­டத்தின் காட்சி அமைப்பு ரசி­கர்­க­ளுக்குப் புதுமையான அனு­ப­வ­மாக இருக்கும்.

"தொடக்­கம் முதல் இறு­தி­வரை பர­ப­ரப்­பா­க­வும் அதே­ச­ம­யம் யதார்த்தை மீறாத வகை­யி­லும் காட்­சி­கள் அமைக்கப்பட்டுள்ளன," என்­கி­றார் இயக்­கு­நர்.

இத்தொடரில் நாயகியாக நிகிலா விமல் நடிக்க, 'ஜெய் பீம்' இதில் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். மேலும் இயக்குநர் கௌதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, மூணாறு ரமேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.

இத்தொடர் விரைவில் வெளியீடு காண உள்ளது.