தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாயகனைக் காப்பாற்றிய நாயகி

1 mins read
92a4afb3-750a-4230-8e5b-50c90e27cea0
-

காதல் காட்­சி­யைப் பட­மாக்­கிய போது தாம் விபத்­தில் சிக்­கிய தாகச் சொல்­கி­றார் விஜய் ஆண்­டனி. இவர் தயா­ரித்து, இசை­ய­மைத்து, இயக்கி உள்ள படம் 'பிச்­சைக்­கா­ரன் 2'. படத்­தின் பாடல் காட்­சியை மலே­சி­யா­வின் லங்­காவி தீவில் பட­மாக்கி உள்­ள­னர்.

விஜய் ஆண்­ட­னி­யும் நாயகி காவ்யா தாப்­பா­ரும் கட­லில் ஓடும் 'ஜெட் ஸ்கி'யில் பய­ணம் செய்­வ­து­போல் அக்­காட்­சி­யைப் படம் பிடித்­துள்­ள­னர்.

"அப்­போது எதிர்­பா­ரா­த­வி­த­மாக நாங்­கள் சென்ற 'ஜெட் ஸ்கி', ஒளிப்­ப­தி­வா­ள­ரின் படகு மீது மோதி­யது. அத­னால் நான் தூக்கி வீசப்­பட்­டேன்.

"எனக்­குப் பின்­னால் அமர்ந்­தி­ருந்த காவ்­யா­வும் ஒளிப்­ப­தி­வா­ள­ரின் உத­வி­யா­ளர் அர்­ஜூ­னும்­தான் என் உயி­ரைக் காப்­பாற்­றி­னர். நான் மறு­பி­றவி எடுக்க அவர்­கள்­தான் கார­ணம்," என்கிறார் விஜய் ஆண்டனி.