உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி உள்ள 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' என்று அடுத்தடுத்து நல்ல படைப்புகளைத் தந்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அதன் பின்னர் மீண்டும் தனுஷை இயக்கப் போவதாகவும் துருவ் விக்ரமுடன் இணைந்துள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆனால் திடீரென்று 'மாமன்னன்' படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மாரி.
"என்னுடைய முதல் இரண்டு படைப்புகளையும் பார்த்த பின்னர் தொடர்புகொண்டார் உதயநிதி. ஆனால் இருமுறையும் அவருடன் இணைந்து செயல்படுவதற்கான சூழல் அமையவில்லை.
"துருவ் விக்ரமை வைத்து விளையாட்டுடன் தொடர்புடைய படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது தான் மீண்டும் தொடர்புகொண்டார் உதயநிதி.
"நடிப்பைக் கைவிடும் முடிவில் இருப்பதாகவும் கடைசிப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார். நான் முன்பே ஏற்றுக்கொண்ட பணிகள் குறித்து விவரித்தேன்.
"உடனே தனுஷையும் விக்ரமையும் அவரே தொடர்புகொண்டு பேசி, 'மாமன்னன்' படத்தை தொடங்க வழிவகை செய்தார். ஒற்றை வரிக் கதையைத்தான் அவரிடம் கூறியிருந்தேன். படம் இயக்குவது உறுதியானதும் அந்த ஒற்றை வரியை முழுமையான கதையாக எழுதி முடித்து, திரை வடிவத்துக்கு ஏற்ப மாற்றினேன்," என்று விவரிக்கிறார் மாரி செல்வராஜ்.
'மாமன்னன்' முழு நீள அரசியல் படமாக உருவாகி உள்ளதாம். தாம் எழுதிய கதையை உதயநிதி ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகம் இருந்ததாகக் குறிப்பிடும் மாரி, தமிழகத்தின் மேற்கு மாவட்ட அரசியலைப் பற்றி இப்படம் அலசும் என்கிறார்.
"ஆனால் உதயநிதிக்கு கதை ரொம்பப் பிடித்திருந்தது. ஒருவர் நம்மை அளவுக்கு அதிகமாக நம்பினால் ஒருவித பயம் ஏற்படும் என்பர். எனக்கும் அந்தப் பயம் வந்தது.
"வடிவேலு, பகத் ஃபாசில் நடிக்க வேண்டும், சேலத்தில் படப்பிடிப்பு, இவ்வளவு நாள் கால்ஷீட் தேவை என்று நான் கேட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்தார் உதயநிதி. அவர் மீதான நன்மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
"ஆளும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு தயக்கமின்றிப் பழகினார். தோன்றியதைச் சொல்ல இடம் கொடுத்தார். அவரது எளிமை என்னைக் கவர்ந்தது," என்கிறார் இயக்குநர் மாரி.
முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதாக இவர் சொன்னதைக் கேட்டு உதயநிதியும் பகத் ஃபாசிலும் அதிர்ச்சி அடைந்தனராம். எனினும் இருவருமே நடிக்க முன்வந்தனர். வடிவேலு ஏற்றுள்ள கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ்த் திரையுலகில் பலர் உள்ளனர். ஆனால் நான் அவர்தான் நடிக்க வேண்டும் என விரும்பினேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. அது நிறைவேறி உள்ளது.
படத்தின் கதாநாயகி கீர்த்தி உட்பட அனைவருமே என்னை நன்கு புரிந்து வைத்துள்ளனர். எதற்காக இந்தப் படத்தை எடுக்க விரும்பினேன் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்துள்ளது.
"சமத்துவம் குறித்துப் பேசுகிற நான் ஏன் மாமன்னன் என்ற தலைப்பை தேர்வு செய்தேன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்வியை நானும் முன்வைக்கிறேன்.
"தலைப்புக்கான காரணத்தைச் சொன்னதும் உதயநிதி பொருத்த மாக உள்ளதாகத் தெரிவித்தார். படக் குழுவில் உள்ள அனைவருமே இந்தத் தலைப்பை ஏற்றுக்கொண்டனர்.
காணொளி மூலமாகத்தான் ஏ.ஆர்.ரகுமானிடம் முதன் முறையாகப் பேசினேன். ஒற்றை வரியில் கதையை விவரித்ததும், அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. உடனே முழுக் கதையையும் விவரிக்கச் சொன்னார். அதன் பிறகு வழக்கம்போல் அருமையான இசையை வழங்கி உள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி," என்கிறார் மாரி செல்வராஜ்.
உதயநிதி ஸ்டாலின்
, :
தமிழகத்

