இப்போதெல்லாம் ஒரு திரைப்்படம் வெளியாகும் முன்பே சர்ச்சை தொடங்கிவிடுகிறது. அந்த வகையில், 'போர்குடி' என்ற படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது ஒரு சாதிப்படம் என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் அது தவறான தகவல் என அப்படத்தின் இயக்குநர் ஆறுபாலா கூறியுள்ளார். போர்குடி என்ற சாதியை உயர்த்திப்பிடிப்பது தமது நோக்கமல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"வன்கொடுமை தடுப்புச் சட்டம் நல்ல நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். அதுகுறித்துதான் இந்தப் படத்தில் அலசப்பட்டுள்ளது.
"பொருளியல் ரீதியில் பின்தங்கியுள்ள மக்்களை மேலும் அதல பாதாளத்துக்கு தள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
"நம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் சிலருக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தையும் புரிய வைக்கும் முயற்சி இது. இதை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள் கிறேன்," என்கிறார் இயக்குநர் ஆறுபாலா.

