சிறு வயது முதலே வேறு வேறு இடங்களில் வளரும் இரண்டு பேர் திருமண பந்தத்தில் இணையும்போது அவர்களின் எண்ணங்கள் நிச்சயம் ஒரே மாதிரியாக இருக்காது என்கிறார் தீபிகா படுகோன்.
இருவர் மீதும் பிறந்து வளர்ந்த சூழல், சமூக வாழ்க்கை, சக மனிதர்களின் ஆலோசனை ஆகியவற்றின் தாக்கம் இருக்கும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த அம்சங்களை நினை வில் வைத்துக்கொண்டால் நிறைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். வித்தியாசமான பின்னணியில் இருந்து வந்த இருவர் கணவன் மனைவியாக ஆன பின்னர் கருத்து வேறுபாடு கள் வருவது இயல்பு. அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமை யோடு நடந்துகொள்ள வேண்டும்.
"நமது பெற்றோரை அணுகிப் பிரச்சினைகளை சொன்னால் அவர்கள் சரியான தீர்வை சொல் வார்கள். நம் பெற்றோர் மகிழ்ச்சி யான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கி றார்கள்.
"அவர்களிடமிருந்து இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன," என்கிறார் தீபிகா.

