அம்மாவுக்கு விருது; ஐஸ்வர்்யா ராஜேஷ் மகிழ்ச்சி

1 mins read
fda337f5-2ccd-472b-81e9-82259595efc1
-

அனைத்­து­லக மக­ளிர் தினத்தை யொட்டி நடிகை ஐஸ்­வர்யா ராஜே­ஷின் தாயார் நாக­ம­ணிக்கு தமி­ழக ஆளு­நர் விருது அளித்து கௌர­விக்க உள்­ளார்.

பல்­வேறு குடும்ப சிர­மங்களுக்கு மத்­தி­யில் தமிழ்த் திரை யுல­கத்­தில் முன்­னணி நடிகை யாக உரு­வெ­டுத்­துள்­ளார் ஐஸ் வர்யா. இதில் அவ­ரது தாயா­ரின் பங்கு மிக முக்­கி­ய­மா­னது.

தொழில் ரீதி­யி­லும் தனிப்­பட்ட வகை­யி­லும் தனது தாயார்­தான் சிறந்த வழி­காட்­டி­யாக இருந்­தார் என ஐஸ்­வர்யா பலமுறை பேட்டி­களில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"சென்­னை­யில் பிறந்து வளர்ந்த நான் தொலைக்­காட்சி நிகழ்ச்­சித் தொகுப்­பா­ள­ராக என கலைப்­ப­ணி­யைத் தொடங்கி னேன். கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்டே குடும்­பத்­தைக் காப்­பாற்­று­வ­தற்­காக சின்­னச் சின்ன வேலை­க­ளைச் செய்­தேன்.

"பெரிய வணிக வளா­கங்க ளின் நுழை வாயில்­க­ள் முன் பல மணி­நே­ரம் கால்­க­டுக்க நின்­ற­படி, விளம்­ப­ரத் தாள்­களை விநி­யோ­கித்­தேன். திரை­யு­ல­கில் அறி­மு­க­மான உட­னேயே கதா நாய­கி­யாக வளர்ந்­து­வி­ட­வில்லை. சிறு­சிறு வேடங்­களில் நடித்துத் திற­மையை நிரூ­பித்த பிறகே வளர முடிந்­தது. என்னை சுதந்­தி­ர­மா­கச் செயல்­பட வைத்து, வெற்றி தோல்­வி­க­ளின்போது உடனி ருந்து வழி­ந­டத்­தி­யது என் தாயார் தான்," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

தன் தாய்க்கு விருது கிடைப்பதைவிட வாழ்க்­கை­யில் மகிழ்ச்சியான தரு­ணம் இருக்க முடி­யாது என தனக்கு நெருக்­க­மா­ன­வர்­களிடம் சொல்லி நெகிழ்­கி­றா­ராம்.