சித்தார்த்துடன் இணைந்து நடிக்கும் 'டக்கர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவரத தயாராகி வருவதாகச் சொல்கிறார் திவ்யன்ஷா.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகும் படம் இது. இயக்குநர் சங்கரின் சீடரான இவர், ஏற்கெனவே 'கப்பல்' என்ற படத்தை இயக்கியவர்.
காதலிக்க ஆசைப்படும் நாயகன், காதல் என்றாலே வெறுக்கும் நாயகி ஆகிய இருவரும் ஒன்றாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
"இதென்ன வித்தியாசமான தலைப்பு என்று பலரும் கேட்கிறார்கள். 'டக்கர்' என்றால் இந்தி மொழியில் மோதல் என்று அர்த்தமாம். எனக்கும் அண்மையில்தான் இது தெரிய வந்தது.
"இரண்டு பேருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம், மோதல் ஆகியவற்றை சுவாரசியமாகக் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர்.
"பணக்காரராக வேண்டும் என்ற வேகத்துடன் நகரத்துக்கு வரும் இளையர் ஒருவர், அங்கு ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். இருவருக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் என்பதால் இணைந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
"எனினும், அனைத்தையும் மீறி இருவருக்கும் இடையே ஒருவிதப் புரிதல் ஏற்படுகிறது. அதற்கேற்ற உடல் மொழியும் வெளிப்படும்போது சுவாரசியம் தொடங்கும். படம் முழுவதும் ஒருவித உற்சாகம் குடிகொண்டிருக்கும். அதனால் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவித்து நடித்தேன்," என்கிறார் திவ்யன்ஷா.
இவர் தமிழில் முதலில் ஒப்பந்தமானது இந்தப் படத்துக்குத்தானாம். ஆனால், இதற்குப் பிறகு ஒப்புக்கொண்ட 'மைக்கேல்' படம் வெளியாகிவிட்டது.
இந்தப் படத்தின் கதைக்கேற்ப அருமையாக நடித்திருப்பதாக திவ்யன்ஷாவைப் பாராட்டுகிறார் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ்.
"காதலில் எல்லாம் எனக்கு நாட்டமில்லை. என்னுடைய அழகுதான் முக்கியம் என்றால் அதை அனுபவித்துக்கொள். ஆனால், திருமணம் குறித்தெல்லாம் பேச வேண்டாம் என்பதுதான் இப்படத்தின் கதாநாயகியின் எண்ணம்.
"அதைத் தகுந்த உடல் மொழியுடன் வெளிப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு, பக்குவமாகவும் கச்சிதமாகவும் நடித்துள்ளார் திவ்யன்ஷா. அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது," என்கிறார் கார்த்திக் ஜி கிரிஷ்.
சித்தார்த்தைப் பொறுத்தவரை, கோபமுள்ள இளையராக இப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பதாகச் சொல்கிறார்.
'பணமும் செல்வமும் ஏன் ஒருசிலரிடம் மட்டும் குவிந்துகிடக்கிறது' என்று கேள்வி எழுப்பும் இளையராக நடித்துள்ளாராம் சித்தார்த்.
"சித்தார்த் அடிப்படையில் ஓர் இயக்கநரும்கூட. எனவே, ஒரு படத்தை தயாரிப்பதிலும் இயக்குவதிலும் உள்ள சிரமங்களை நன்கு உணர்ந்தவர். இல்லையெனில் மணிரத்னம் போன்ற மிகப்பெரிய இயக்குநரிடம் பணியாற்றி இருக்க வாய்ப்பில்லை.
"படப்பிடிப்பின்போது இயக்குநரின் பணியில் எந்த வகையிலும் தலையிட மாட்டார். அதே சமயம் தனக்கான கதாபாத்திரத்தையும் மொத்தக் கதையையும் தனக்குப் புரியும் வரை கேட்டுக்கொண்டே இருப்பார்.
"எதையும் ஓர் இயக்குநரின் பார்வையில் அணுகக் கூடியவர். அதனால் எடுக்கப்படும் காட்சி குறித்து அவரிடம் அதிகம் விவரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழ்த் திரையுலத்தில் வெற்றி வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்," என்கிறார் கார்த்திக் ஜி கிரிஷ்.
'டக்கர்' படத்தில் குண்டர் கும்பல் தலைவன், அவரது மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் யோகி பாபு.
'வேலாயுதம்', 'தலைவா', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டிய அபிமன்யூ சிங்தான் 'டக்கர்' படத்திலும் வில்லன்.
இவர்களைத் தவிர முனீஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோரும் உள்ளனர்.
"காதல், அடிதடிகள் நிறைந்த படம் என்றாலே பாடல்கள் மிக முக்கியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இளையர்களுக்குப் பிடித்தமான நிவாஸ் கே பிரசன்னாதான் இசை அமைத்துள்ளார். 'மரகத மாலை...', 'ரெயின்போ...' உட்பட படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.
"அவற்றுள் 'ரெயின்போ...' பாடலை சிம்பு பாடியுள்ளார். ஆண்ட்ரியாவும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இவர்களைத் தவிர, பிரதீப், சின்மயி, விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன் ஆகியோரும் தங்கள் வசீகரக் குரலால் ரசிகர்களை மயக்க உள்ளனர்.
திவ்யன்ஷா
, :
தமிழகத்

