கமல்ஹாசன் நடிக்கும் புதுப் படத்தை இயக்கி முடித்த கையோடு, விக்ரமை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம்.
கமல், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தை கமலின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் மணிரத்னம்.
இதையடுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விக்ரமை நாயகனாக வைத்து அவர் இயக்க உள்ள புதுப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யாவிடம் கதையைச் சொல்லி, கால்ஷீட்டும் பெற்றுவிட்டாராம் மணிரத்னம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வணிக அம்சங்கள் நிறைந்த படமாக இது இருக்கும் என்கிறது இயக்குநர் தரப்பு.
அதேசமயம் விக்ரமின் நடிப்புப் பசிக்கு தீனி போடும் வகையில் அவரது கதாபாத்திரத்தை மணிரத்னம் செதுக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

