'நினைவெல்லாம் நீயடா'

'நினைவெல்லாம் நீயடா'

3 mins read
c5d9c6a3-7456-468a-a788-7927931b8755
-

ஒரு படத்­தில் இரண்டு நாய­கி­கள் இருந்­தாலே சிக்­கல் என்­பார்­கள். ஆனால், 'நினை­வெல்­லாம் நீயடா' என்ற படத்­தில் மூன்று நாய­கி­களை நடிக்க வைத்­துள்­ளார் இயக்­கு­நர் ஆதி­ரா­ஜன்.

முழு­நீள காதல் கதையை மைய­மாக வைத்து உரு­வா­கும் இப்­ப­டத்­தில் இடம்­பெ­றும் சம்­ப­வங்­க­ளு­டன் படம் பார்க்­கும் ரசி­கர்­கள் தங்­களை எளி­தில் பொருத்­திக்­கொள்ள முடி­யும் என்­கிறது இயக்­கு­நர் தரப்பு.

இதற்கு முன்பு 'சிலந்தி', 'ரண­தந்­தீரா' (கன்­ன­டம்), 'அருவா சண்ட' என மூன்று படங்­களை இயக்­கி­யுள்ள இவர், செய்தி ஊட­கத்­து­றை­யில் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர்.

"ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் காதல் அனு­ப­வங்­கள் மன­தில் தேங்கி இருக்­கும். என்­னைப் பொறுத்­த­வரை இந்த உல­கத்­தில் உள்ள பாதிப் பேருக்கு அறிந்­தும் அறி­யாத வய­தில்­தான் காதல் உணர்வு ஏற்­பட்­டி­ருக்­கும். பெரும்­பா­லும் அது பள்­ளிக்­கூ­டக் காத­லாக இருக்­கக்­கூ­டும்.

"அது­போன்ற ஒரு காத­லைத்­தான் இந்­தப் படத்­தில் பதிவு செய்­தி­ருக்­கி­றேன். நாய­க­னுக்­கும் நாய­கிக்­கும் இடையே ஒரு மோத­லில் ஆரம்­பிக்­கும் தொடர்பு காத­லில் முடி­வ­டை­யும். தன் மன­தில் உள்ள காதலை நாய­கன் தெரி­விக்­கி­றான்.

"ஆனால் நாய­கியோ, தன் படிப்­புக்­காக வெளி­நாடு செல்­வ­தா­கச் சொல்­கி­றார். காத­லி­யின் பதி­லுக்­கா­கக் காத்­தி­ருக்­கும் நாய­க­னின் காதல் வெற்­றி­ அ­டைந்­ததா என்­பதை முக்­கோ­ணக் காதல் கதை­யா­கச் சொல்லி உள்­ளேன்," என்­கி­றார் இயக்­கு­நர் ஆதி­ரா­ஜன்.

இப்­ப­டத்­தில் சின்­னத்­தி­ரை­யில் பிர­ப­ல­மாக உள்ள பிர­ஜன் நாய­க­னாக நடித்­துள்­ளார். இளம் நாய­கன் நடித்­தால் நன்­றாக இருக்­கும் என்ற எண்­ணத்­தில் சிலரை அணு­கி­னா­ராம் ஆதி­ரா­ஜன்.

ஆனால் கதை பிடித்­தி­ருந்­தா­லும் சில நடி­கர்­கள் நடிக்க முன்­வ­ர­வில்லை. வேறு சிலரோ, புதிய தயா­ரிப்பு நிறு­வ­னம், வளர்ந்து வரும் இயக்­கு­நர் என்று கார­ணம் காட்டி நடிக்க மறுத்­துள்­ள­னர்.

"நான் யாரு­டைய பெய­ரை­யும் குறிப்­பிட விரும்­ப­வில்லை. 'பொன்னி­யின் செல்­வன்' படத்­தில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்த ஒரு நடி­க­ரிடம் என் கதை­யைச் சொன்­னேன். ஆனால் அவர் நடிக்­க­வில்லை.

"பிர­ஜன் அனை­வ­ருக்­கும் நன்கு அறி­மு­க­மான இளம் நாய­கன். நான் கதையை விவ­ரித்த உட­னேயே நடிக்க சம்­ம­தித்­து­விட்­டார்.

"கதைப்­படி, இசை­ய­மைப்­பா­ள­ராக நடிக்­கி­றார். இனி காதல் கதை­க­ளுக்கு இவரை விட்­டால் பொருத்­த­மான நடி­கர் இல்லை என்று சொல்­லும் அள­வுக்கு பிர­மா­த­மாக நடித்­துள்­ளார் பிர­ஜன்," என்று சொல்­லும் ஆதி­ரா­ஜன், முக்­கோ­ணக் காதல் கதை என்­ப­தால் மூன்று நாய­கி­களை நடிக்க வைத்­துள்­ள­தாகக் கூறு­கி­றார்.

சில நாய­கி­கள் கதை பிடித்­தி­ருந்தபோதி­லும் பிரஜன்­தான் நாய­கன் என்­ற­தும் நடிக்கத் தயங்கி உள்­ள­னர். முன்­னணி நாய­கி­களோ, கதை கேட்­கக்­கூ­டத் தயங்­கி­னார்­க­ளாம்.

"நல்ல கதை­தான் வெற்றி பெறும் என்­பது சில கதா­நா­ய­கி­க­ளுக்­குப் புரி­ய­வில்லை. ஆனால், கதை­தான் ஒரு படத்­தின் கதா­நா­ய­கன் என்­பதை மனிஷா யாதவ் நன்கு புரிந்து வைத்­துள்­ளார்.

"அவர் வெளி­யூ­ரில் இருந்­த­போது கைப்­பேசி வழி கதைச்­சு­ருக்­கத்தை தெரி­வித்­தேன். அதைக் கேட்­ட­தும் ஆர்­வம் அதி­க­ரிக்­கவே, உட­ன­டி­யாக சென்­னைக்கு வந்து முழுக் கதையும் கேட்டு நடிக்க ஒப்­புக்­கொண்டார். கதைப்படி, அத்தை பெண் ஆனந்தி என்ற கதா­பாத்­தி­ரத்­தில் அவர் நடித்­துள்­ளார்.

"மனி­ஷா­வுக்கு இதற்கு முன்பு நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தன. எனி­னும், மிகப்­பெ­ரிய வெற்­றிப் படத்­தில் அவ­ரைக் காண முடி­யா­த­தில் எனக்­கும் வியப்பு கலந்த வருத்­தம் உண்டு. அவர் இயக்­கு­நர்­க­ளுக்கு ஏற்ற நடிகை என்­பேன். நிச்­ச­யம் அவர் வெற்றி நாய­கி­யாக கோடம்­பாக்­கத்­தில் வலம் வரு­வார் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் இயக்­கு­நர் ஆதி­ரா­ஜன்.

புதுவையைச் சேர்ந்த சினாமிகா புதுமுகம் எனச் சொல்ல முடியாத அளவுக்கு அருமையாக நடித்துள்ளதாகக் குறப்பிடுபவர், 'கிளசரின்' இல்லாமலேயே சோகக் காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுது நடித்ததைக் கண்டு தாம் அசந்து போனதாகச் சொல்கிறார்.

ஸ்ரீபிரியங்கா முதன்முறையாக வில்லத்தனம் நிறைந்த நாயகியாக நடித்துள்ள படம் இது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்குமாம். நாயகனின் நண்பராக ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், மதுமிதா, பி.எல்.தேனப்பன், மனோபாலா, முத்துராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

, :

தமி­ழ­கத்  