ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் நடிப்பது தெரியும். தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவும் இப்படத்தில் இணைந்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார் ரஜினி.
"முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்திய மிகவும் மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது," என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.
'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி. ரஜினியின் சமூக ஊடகப் பதிவைக் கண்ட ரசிகர்கள், கபில் தேவையும் ரஜினி யையும் திரையில் காண ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

