அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின்போது நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா உயிரிழந்தார். இதை அறிந்து கண்கலங்கிய சூர்யா, தனது ரசிகையின் மறைவுக்கு அறிக்கை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார் (படம்).
"இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. இச்சம்பவம் உண்மையில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உங்களின் மகளான ஐஸ்வர்யாவை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. ஒரு சக மனிதராக மட்டுமின்றி, ஒரு தந்தையாகவும் உங்கள் துயரத்தில் நான் பங்கெடுத்துக்கொள்கிறேன்," என்று ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் வகையில் சூர்யாவின் அறிக்கை அமைந்துள்ளது.

