மலேசியாவில் புதுப்பட பூசை

மலேசியாவில் புதுப்பட பூசை

1 mins read
7852a6a7-fb7d-40f0-975a-5e7b0e25bf84
-

விஜய் சேது­பதி நடிக்­கும் புதிய படத்­துக்­கான பூசை, மலே­சி­யா­வில் உள்ள கோவி­லில் சிறப்­பாக நடந்­தே­றி­யது. அவ­ருக்கு மலேசிய ரசி­கர்­கள் பல­ரும் சமூக ஊட­கங்­களில் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

விஜய் சேது­பதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்­றேன்' படத்தை இயக்­கி­ய­வர் பி.ஆறு­முக குமார். அவர் மீண்­டும் சேது­பதியை வைத்து இயக்­கித் தயா­ரிக்­கும் படத்­துக்கு இன்­னும் தலைப்பு வைக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், இப்­ப­டத்­துக்­கான பூசை­யு­டன் கூடிய தொடக்க விழா மலே­சி­யா­வில் உள்ள ஈப்போ நக­ரில் நடை­பெற்­றது.

இதில் பட நாய­க­னு­டன் மலேசிய பிர­மு­கர்­கள் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

இப்­ப­டத்­தில் யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்­கு­மார் உள்­ளிட்ட பலர் நடிக்­கி­றார்­கள். ஜஸ்­டின் பிர­பா­கரன் இசை­ய­மைக்­கி­றார்.