தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாளவிகா: விக்ரம் மிகவும் பெருந்தன்மையானவர்

1 mins read
e9b96ffe-feed-4826-b895-7badf1fdac90
-

நடி­கர் விக்­ரம் மிக­வும் பெருந்­தன்மை­யா­ன­வர் என்­கி­றார் மாளவிகா மோக­னன்.

இரு­வ­ரும் பா.ரஞ்­சித் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'தங்­க­லான்' படத்­தில் நடித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், பேட்டி ஒன்­றில் 'தங்­க­லான்' படத்­தில் நடிப்­பது அற்­பு­த­மான பய­ணம் என்­றும் விக்­ரம் இல்­லா­மல் இந்­தப் பயணம் குறித்து தம்­மால் நினைத்­துக்­கூட பார்க்க முடி­ய­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"விக்­ர­மைப் பொறுத்­த­வரை தாம் மட்­டுமே சிறந்த நடி­கர் என்று பெய­ரெ­டுக்க விரும்­ப­ மாட்­டார்.

"தன்­னு­டன் நடிக்­கும் அனை­வருக்­கும் பாராட்டு கிடைக்க வேண்­டும் என்று அக்­கறை காட்டு­வார். உடன் நடிப்­ப­வர்­களைத் தட்­டிக்­கொ­டுத்து ஊக்கப்­ப­டுத்­து­வது அவ­ரது சிறந்த குணங்­களில் ஒன்று. அவர் படப்­பி­டிப்­பில் இருந்தால் மொத்த அரங்­க­மும் கல­க­லப்­பாக இருக்­கும்.

"மற்­ற­வர்­களும் வாழ்க்­கை­யில் முன்­னேற வேண்­டும் என்று நினைக்­கும் நல்ல மனி­தர் விக்ரம்.

"அவ­ருக்கு காயம் ஏற்­பட்­ட­தால் படப்­பி­டிப்பு நிறுத்­தப்­பட்­டுள்­ளது. மிக விரை­வில் அவர் குண­ம­டைந்து படப்­பி­டிப்­புக்­குத் திரும்பு­வார். ரசி­கர்­கள் அவர் விரை­வில் குண­­ம­டைய பிரார்த்­திக்க வேண்டும்," என்று மாள­விகா கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

அண்­மை­யில் இணை­யம் வழி ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்­டார் மாள­விகா. அப்­போது எழுப்­பப்­பட்ட பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

மாளவிகா மோகனன், விக்ரம்.