'தெரிந்ததைச் செய்கிறேன்'

'தெரிந்ததைச் செய்கிறேன்'

3 mins read
bfbcdc77-3e7e-4acc-bf16-75745d64f080
-

'பிச்­சைக்­கா­ரன்' படத்­தின் இரண்­டாம் பாகத்தை உரு­வாக்க வேண்­டும் என்ற ஆவல்­தான் தம்மை இயக்­கு­ந­ராக மாற்­றி­யது என்­கி­றார் அப்­ப­டத்­தின் நாய­கன் விஜய் ஆண்­டனி.

தாம் திட்­ட­மிட்டு திரைப்­பட இயக்­கு­நராக­வில்லை என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இசை­ய­மைப்­பா­ள­ராக திரை­யு­லகுக்கு அறி­மு­க­மான எனக்கு, இயக்­கு­நர் ஆக வேண்­டும் என்ற குறிக்­கோள் இருந்­த­தில்லை. 'பிச்­சைக்­கா­ரன்' போல் ஒரு படம் மீண்டும் வெளி­வந்­தால் நன்­றாக இருக்­கும் என்று தோன்­றி­யது. மன­தில் இந்த எண்­ணம் தோன்­றி­ய­தும் அதே வேகத்­தில் ஒரு கதையை எழுதி முடித்­தேன்.

"பின்­னர் முதல் பாகத்தை இயக்­கிய இயக்­கு­நர் சசியை அணு­கி­ய­போது, அவர் 'நூறு கோடி வான­வில்' பட வேலை­களில் மூழ்கி இருந்­தார். அவ­ரது அந்தப் படத்தை முடித்த பிற­கு­தான் என்­னு­டன் இணைந்து பணி­யாற்ற முடி­யும் என்று தன் சூழலை அவர் வெளிப்­படை­யாகச் சொன்­னார்.

"இன்­னொரு தயா­ரிப்­பா­ள­ரிடம் முன்­ப­ணம் பெற்­றுள்­ள­தா­க­வும் தமது அடுத்த படத்தை அந்­தத் தயா­ரிப்­பா­ள­ருக்கு இயக்­கித் தர­வேண்­டிய பொறுப்­பும் கட்­டா­ய­மும் இருப்­ப­தாக சசி சொன்­ன­போது, அதில் உள்ள நியா­யம் எனக்­குப் புரிந்தது," என்று விஜய் ஆண்­டனி தெரி­வித்­துள்­ளார்.

'பிச்­சைக்­கா­ரன்' படத்தின் இரண்­டாம் பாகத்தை இயக்­கு­வது தொடர்­பாக மேலும் சில இயக்­கு­நர்­க­ளைச் சந்­தித்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், குறிப்­பிட்ட சில கார­ணங்­க­ளால் அவர்­க­ளு­டன் இணைய முடிய­வில்லை எனக் கூறி­யுள்­ளார்.

என­வே­தான், வேறு வழி­யின்றி தாமே இயக்­கு­ந­ரா­வது நல்­லது என முடி­வெ­டுத்­தாராம். முதல் பாகத்­துக்­கும் இப்­போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகத்துக்கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என தொடக்­கத்­தி­லேயே தெளி­வு­ப­டுத்­து­கி­றார்.

"மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரு­வ­னின் கதை இது. முதல் பாகம் அம்மா, மகன் பாசத்தைப் பேசி­யது. அடுத்த பாகம் அண்­ணன், தங்கை பாசத்­தைப் பற்றி அலசி உள்ளது.

"இந்­தி­யா­வின் ஏழா­வது பணக்­கா­ர­ரான விஜய் குரு­மூர்த்­தி­யின் வாழ்க்­கை­யில் நடக்­கும் சில சுவா­ர­சி­ய­மான நிகழ்­வு­கள்­தான் படம். விஜய் குரு­மூர்த்­திக்கு சத்யா என்று இன்­னொரு பெயர் இருக்­கும். அந்­தப் பெயர் ஏன் வந்­தது என்­பது படம் பார்க்­கும்­போ­து­தான் புரி­யும்.

"எனக்கு எது வச­தியோ, எது எனது குணா­தி­ச­யத்­துக்கு ஒத்துவருமோ, அவற்றை மட்­டும்­தான் முயற்சி செய்­வேன். எனது பலம், பல­வீ­னம் குறித்து மற்­ற­வர்­க­ளை­விட நான் அதி­கம் தெரிந்து வைத்­துள்­ளேன்," என்­கி­றார் விஜய் ஆண்­டனி.

தனது புதுப்­ப­டத்­தில் கதைக்கு தேவை­யான அம்­சங்­கள் மட்­டுமே இடம்­பெற்றுள்ளதாக குறிப்­பி­டு­ப­வர், படத்­துக்­கான இசை­யும் பாடல்­களும் மிகப் பொருத்­த­மாக அமைந்துள்ளன என்­கி­றார்.

"பாடல்­கள் கதைக்கு தேவை­யா­ன­தாக, சூழ்­நிலைக்­குப் பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்.

"அனைத்­துப் பாடல்­க­ளை­யும் கவி­ஞர் அருண்­பா­ரதி எழு­தி­யுள்­ளார். பின்­னணி இசை­யும் கதையை மீறா­த­ள­வுக்கு இருக்­கும். ஓம் நாரா­ய­ணன் ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார்.

"தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம், இந்தி என ஐந்து மொழி­களில் விஜய் ஆண்­டனி பிலிம் கார்ப்­ப­ரே­ஷன் இப்­ப­டத்தை தயா­ரித்­துள்­ளது.

சென்னை, துபாய், மலே­சி­யா என முந்­நூறு இடங்­களில் படப்­பி­டிப்பை நடத்தினோம். இசை­ய­மைப்­பா­ளர், நடி­கர், பாட­கர், பாட­லாசி­ரி­யர், படத்­தொ­குப்­பா­ளர் என இது­நாள் வரை கோடம்­பாக்­கத்­தில் வலம்வந்த நிலை­யில் இயக்­கு­ந­ரா­க­வும் செயல்­ப­டு­வது நெருக்­க­டியை ஏற்­படுத்­தாதா என்று சிலர் கேட்­கி­றார்­கள்.

"நான் முன்பே குறிப்­பிட்­ட­து­போல் எனக்கு எது வருமோ அதை மட்­டுமே செய்­கி­றேன். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்," என்­கி­றார் விஜய் ஆண்­டனி.