'பணம் இன்றிருக்கும் நாளை இருக்காது: மனம்தான் முக்கியம்'

'பணம் இன்றிருக்கும் நாளை இருக்காது: மனம்தான் முக்கியம்'

1 mins read
70c759fe-6e32-4c84-bbed-c125dd9eee5e
-

மனித மனம்­தான் முக்­கி­ய­மா­னது, பணம் அல்ல என்­கி­றார் நடி­க­ரும் இயக்­கு­ந­ரு­மான பார்த்­தி­பன்.

தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் வெளி­யா­கி­யுள்ள அண்­மைய பதிவு ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. இரண்­டா­யி­ரம் ரூபாய் நோட்­டு­கள் தொடர்­பாக அவ­ரது பதிவு அமைந்­துள்­ளது.

"ஆயி­ரமே இருந்­தா­லும், இன்­றி­ருக்­கும் நாளை இருக்­காது-பணம்! மதிப்­பு­மிகு மனம் காப்­போம்," என்று இரண்­டா­யி­ரம் ரூபாய் நோட்டு புகைப்­ப­டத்­தைப் பகிர்ந்து பதி­விட்­டுள்­ளார்.

இப்­ப­திவு தற்­போது இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது. தற்­போது புதிய படம் இயக்­கு­வ­தில் பார்த்­தி­பன் தீவி­ரம் காட்டி வரு­கி­றார். அதற்­கா­கப் படப்­பி­டிப்பு நடத்­து­வ­தற்­கான இடங்­க­ளைத் தேர்­வும் செய்யும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக அவர் அண்­மை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.