2 நாயகிகள், 4 வில்லன்கள்

2 நாயகிகள், 4 வில்லன்கள்

3 mins read
d2bd960d-3bd8-4556-8bfa-e5eaf4536d57
-

ஒரு குண்­டர் கும்­பல் தலை­வ­னின் வாழ்க்­கையை மையப்­படுத்தி உரு­வா­கும் படம் 'தலை­ந­க­ரம் 2'. இதில் சுந்­தர்.சி நாய­க­னாக நடிக்க, வி.இசட்.துரை இயக்­கு­கி­றார்.

பாலக் லால்­வானி, ஐரா என படத்­தில் இரு நாயகி­கள் நடித்­துள்­ள­னர். தம்பி ராமையா தத்­து­வம் பேசும் பேரா­சி­ரி­ய­ராக திரை­யில் தோன்­று­கி­றார்.

"ஏற்­கெ­னவே வெளி­யீடு கண்ட 'தலை­ந­க­ரம்' படத்­துக்­கும் என்­னு­டைய புதிய படைப்­புக்­கும் எந்­த­வி­த­மான தொடர்­பும் இல்லை. தலைப்பை மட்­டுமே பயன்­ப­டுத்தி உள்­ளேன். மேலும், 'ரைட்' என்­கிற சுந்­தர்.சி.யின் கதா­பாத்­தி­ரத்­தை­யும் என் கையில் எடுத்­துள்­ளேன்.

"எனக்கு ஒரு தீவி­ர­மான குண்­டர் கும்­ப­லின் தலை­வர் திரை­யில் தேவைப்­பட்­டார். ஏற்­கெனவே 'ரைட்' என்ற கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­களுக்கு நன்கு அறி­மு­க­மாகி, பிர­ப­ல­மா­க­வும் இருப்­ப­தால் அந்­தப் பெய­ரைத் தேர்வு செய்­தேன்.

"பொது­வாக குண்­டர் கும்­பல்­களின் தலை­வர்­களைச் சிறு அடி­யாள் கூட்­டத்­து­டன் கூட பார்க்க இய­லாது. அவர்­கள் பெரும்­பா­லும் தனி­யா­கத்­தான் காணப்­ப­டு­வர்.

"ஆனால் திரைப்­ப­டங்­களில் இதற்கு முற்­றி­லும் நேர்­மா­றாக அவர்­க­ளைச் சித்­தி­ரிக்­கி­றோம். குண்­டர் கும்­பல் தலை­வன் என்றால் பெரிய காரில் வந்­திறங்­கு­வான், சுற்­றி­லும் இருபது அடி­யாள்­கள் இருப்­பார்­கள், பயங்­கர ஆயு­த­ங்­க­ளு­டன் சுற்­றித் திரி­வார்­கள் என்று காட்­சிப்­ப­டுத்­து­வது வழக்­க­மாக உள்­ளது. ஆனால் உண்மை நில­வ­ரம் அது­வல்ல.

"எனி­னும் அந்­தக் குண்­டர்­கள் அவ்­வப்­போது ஓர் அர­சாங்­கம் போல செயல்­ப­டு­வார்­கள். அடி­தடி, வெட்டு குத்து ஆகி­ய­வை­தான் அவர்­க­ளு­டைய வாழ்க்கை. ஆனால் இவற்றை எல்­லாம் ஏன் செய்­கி­றார்­கள் என்­ப­து­தான் முக்­கி­யக் கேள்வி.

"முன்­ப­கைக்­கா­கவோ, நட்­புக்­கா­கவோ இருக்­கக்­கூ­டும். சில சம­யங்­களில் சொத்­துக்­கா­க­வும் அடா­வடி செய்­வார்­கள். இப்­ப­டிப் பல கார­ணங்­கள் இருக்­கும். எனவே, வெறும் பணத்­துக்­கா­கத்­தான் அவர்­கள் எல்­லாம் செய்­கி­றார்­கள் என்று முடிவு கட்­டு­வது சரி­யாக இருக்­காது.

"சில சம­யங்­களில் அவர்­க­ளுக்கு இது நல்­ல­வி­த­மான செயல்­பா­டாக தோன்­றக்­கூ­டும். சினிமா கதா­நா­ய­க­னைப் போல் தங்­க­ளை­யும் கற்­பனை செய்து கொள்­கி­றார்­கள். இத­னால் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும் மகிழ்ச்சி மன­தில் தங்­கி­வி­டு­கிறது போலும். ஒரு­சில குண்­டர் கும்­பல் தலை­வர்­கள் வெட்­டு­வது, குத்­து­வ­தில் கூட தங்­க­ளுக்கு என தனி பாணியை, ஸ்டை­லைப் பின்­பற்­று­கி­றார்­கள். இன்­னொ­ரு­வ­ரின் பயம், தயக்­கம் ஆகியவை­தான் இந்­தக் குண்­டர்­க­ளின் பலம். இவை அனைத்­தை­யும் எனது புதுப்­ப­டத்­தில் காட்­சிப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் இயக்­கு­நர் துரை.

இப்­ப­டத்­தின் கதா­நா­ய­கன் சுந்­தர்.சி. இது­வரை முழு­நீள அடி­த­டிப் படத்­தில் நடித்­த­தில்லை என்று சுட்­டிக்­காட்­டு­ப­வர், சுந்­தர்.சி.யும் இயக்­கு­நர் என்­ப­தால் அவரை வைத்­துப் படம் இயக்­கு­வது எளி­தான பணி­யாக இருக்­கும் என்­கி­றார்.

"நல்ல படைப்­பா­ளி­க­ளால் சுந்­தர்.சியை நன்கு பயன்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும். நம் விருப்­பத்­துக்கு ஏற்ற மாதிரி நடிப்­பார். அவ­ரது உய­ரத்­துக்­கும் கம்­பீ­ரத்­துக்­கும் முழு­நீள அடி­தடி நாய­க­னாக நடிப்­ப­து­தான் பொருத்­த­மாக இருக்­கும். இது­வரை அவர் இதைச் செய்­யா­த­தால் நான் ஒரு படத்தை அவ்­வாறு உரு­வாக்­கு­கி­றேன்.

"அவ­ரது சினிமா அனு­ப­வம் எத்­த­கைய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தா­லும் கைகொ­டுக்­கும். அதை என் படத்­துக்­காக அவர் பணி­யாற்­றி­ய­போது கண்­கூ­டா­கப் பார்த்­தேன்.

"கதா­நா­யகி பாலக் லால்­வா­னி­யைப் பொறுத்­த­வரை மிகப்­பொ­ருத்­த­மான தேர்வு எனக் கரு­து­கி­றேன். அவ­ரது கதா­பாத்­தி­ரத்தை வேறு நாயகி ஏற்­றி­ருந்­தால் எனக்கு மன­நி­றைவு கிடைத்­தி­ருக்­குமா என்­பது சந்­தே­கம்­தான். மற்­றொரு நாய­கி­யான ஐரா­வும் கச்­சி­த­மாக நடித்­துள்­ளார். சுந்­தர்.சி.க்கு ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் நான்கு வில்­லன்­க­ளைக் கள­மி­றக்கி உள்­ளேன். அத­னால் எனது புதுப் படத்­தின் தொடக்­கம் முதல் இறு­தி­வரை ஒவ்­வொரு காட்சியும் விறு­வி­றுப்­பா­க­வும் அதி­ர­டி­யா­க­வும் இருக்­கும்," என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார் இயக்­கு­நர் துரை.