விஜய்க்காக கதையில் மாற்றம் செய்யும் வெங்கட் பிரபு

விஜய்க்காக கதையில் மாற்றம் செய்யும் வெங்கட் பிரபு

3 mins read
3376d42f-a3d6-4aef-b83c-3447faeee4f3
-

வெங்­கட் பிரபு ரஜி­னிக்­காக எழு­திய கதை­யில் சில மாற்­றங்­களைச் செய்து விஜய்­யி­டம் கூறி­யுள்­ளார். விஜய்­யும் கதை தனக்குப் பிடித்து இருப்­ப­தா­கக் கூற அடுத்த நட­வ­டிக்­கை­யில் இறங்கி இருக்­கி­றார் இயக்­கு­நர் வெங்­கட் பிரபு.

'லியோ' படத்­திற்குப் பிறகு விஜய் சூப்­பர் குட் பிலிம்ஸ் தயா­ரிக்­கும் படத்­தில் நடிக்க இருக்­கிறார் என தக­வல்­கள் வந்­தன. மேலும் தயா­ரிப்பு நிறு­வ­னத்தைச் சார்ந்­த­வர்­களும் இந்தத்

தக­வலைக் கிட்­டத்­தட்ட உறு­திப்­ப­டுத்­தி­னர்.

இதை­ய­டுத்து 'தள­பதி 68' படத்தைப் பிர­பல தெலுங்கு இயக்­கு­நர் கோபி­சந்த் இயக்­கப்­போ­கின்­றார் என்­றும் பேசப்­பட்­டது. மறு­பக்­கம் 'தள­பதி 68' திரைப்­ப­டத்தை சன் பிக்­சர்ஸ் தயா­ரிப்­ப­தா­க­வும் அப்­ப­டத்தை அட்லீ இயக்க இருப்­ப­தா­க­வும் தக­வல்­கள் வெளி வந்­தன.

இவ்­வாறு 'தள­பதி 68' படத்­திற்­காகக் கடு­மை­யான போட்­டி­கள் நிலவி வந்த நிலை­யில் யாரும் எதிர்­பா­ராதவித­மாக வெங்­கட் பிர­புவை தன் அடுத்த பட இயக்­கு­ந­ராக ஒப்­பந்­தம் செய்­தி­ருக்­கி­றார் தள­பதி விஜய்.

வெங்­கட் பிரபு உண்­மை­யில் இந்­தக் கதையை நடி­கர் ரஜி­னிக்­காக எழு­தி­யிருந்தார். ஆனால், அந்­தப் படத்­தில் அர­சி­யல் வச­னங்­கள் அதி­கம் இருந்­த­தால் ரஜி­னி­காந்த் தனக்கு அந்­தக் கதை சரி­வ­ராது என்று கூறி மறுத்­து­விட்­டார்.

நடி­கர் விஜய் அர­சி­ய­லில் இறங்­கும் நோக்­கத்­து­டன் இருப்­ப­தும் அவர் தன்­னு­டைய ரசி­கர் மன்­றத் தலை­வர்­க­ளைச் சந்­தித்துப் பேசி வரு­வ­தும் பல­ரும் அறிந்­ததே.

அத­னால் அந்­தக் கதையை விஜய்­யி­டம் சொன்­னால் அவர் ஏற்­றுக்­கொள்­வார் என்­ப­தால் விஜய்யை அணு­கி­னார். கதை­யைப் படித்த விஜய் மகிழ்ந்­து­போய் தனக்குக் கதை பிடித்து இருப்

­ப­தா­க­வும் இன்­னும் சில மாற்­றங்­க­ளைச் செய்­யு­மாறும் கூறி­யி­ருக்­கி­றார்.

அத­னால் வெங்­கட் பிரபு 'தள­பதி 68' படத்­தின் திரைக்­க­தையை மிகத் தீவி­ர­மாக எழுதி வரு­கின்­றார். மறு­பக்­கம் விஜய் 'லியோ' படத்­தில் இடைவிடாது நடித்து வரு­கின்­றார். எனவே 'லியோ' படத்­தின் படப்­பி­டிப்பு முடி­ந்ததும் விஜய், வெங்­கட் பிர­பு­வி­டம் முழுக் கதை­யை­யும் கேட்பார் என்று கூறப்படுகிறது.

அதைத்­தொ­டர்ந்து ஜூன் மாதம் விஜய்­யின் பிறந்­த­நாளை முன்­னிட்டு 'தள­பதி 68' படத்­தின் பூஜை நடை­பெற இருப்­ப­தாகத் தெரி­கின்­றது. பூஜை முடி­வ­டைந்த பிறகு ஜூலை மாதம் 'தள­பதி 68' படத்­தின் படப்­

பி­டிப்பைத் துவங்கி அடுத்­தாண்டு ஏப்­ரல் மாதம் படத்தை வெளி­யிட படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது

மேலும் இப்­ப­டத்தை AGS நிறு­வ­னம் தயா­ரிப்­ப­தாக அறி­விப்­பு­கள் வெளி­யா­கின. அதைத்­தொ­டர்ந்து விஜய் இப்ப­டத்­திற்­காக ரூ.200 கோடி சம்­ப­ள­மாக வாங்­கி­யி­ருப்­ப­தா­க­வும் செய்­தி­கள் உலா வரு­கின்­றன.

விஜய் தற்­போது லோகேஷ் கன­க­ரா­ஜின் இயக்­கத்­தில் 'லியோ' படத்­தில் இடைவிடாது நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார். எனவே 'லியோ' படம் முடிந்த பிறகே அவ­ரின் அடுத்த பட அறி­விப்பை வெளி­யி­டு­வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

இதைப்­போ­லத்­தான் 'வாரிசு' படம் வெளி­யான பின்­னர்­தான் 'லியோ' படத்­தின் அறி­விப்பை வெளி­யிட்­ட­னர். ஆனால் இம்­முறை 'லியோ' படத்­தின் படப்­பி­டிப்பு நடை­பெற்று வரும்­போதே 'தள­பதி 68' படத்­தின் அறி­விப்பை வெளி­யிட்­டார் தள­பதி. இது பல­ருக்­கும் ஆச்­ச­ரி­ய­மான விஷ­ய­மாக இருக்­கின்­றது.

பல­ரும் விஜய்க்கு 'லியோ' படத்­தின் மேல் இருக்­கும் நம்­பிக்கைதான் அப்­ப­டம் முடி­வ­டை­யும் முன்னே அடுத்த படத்­தின் அறி­விப்பை வெளி­யிட கார­ண­மாக அமைந்­தது என தங்­கள் கருத்தைக் கூறி வரு­கின்­ற­னர். என்ன இருந்­தா­லும் தள­பதி ரசி­கர்­க­ளுக்குத் தற்­போது இரட்­டிப்பு கொண்­டாட்­ட­மா­கவே இருக்­கின்­றது.