கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து மணிரத்னம் இயக்கும் 'KH 234' படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்.
சென்ற ஆண்டு நவம்பரில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 234வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி 'KH 234' படத்தை மணிரத்னம் இயக்குவது உறுதியானது. ரெட் ஜெயன்ட், ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987ஆம் ஆண்டு வெளியானது 'நாயகன்' படம். அந்தப் படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதன்பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி இணையவே இல்லை.
சுமார் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் 'KH 234' படம் பற்றி மனம் திறந்துள்ளார் கமல்ஹாசன். "நாங்கள் 'KH 234' பட வேலையைத் தொடங்கிவிட்டோம். ஆனால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு எங்களை பதற்றமடைய வைக்கின்றது. இருப்பினும் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். 'KH 234' படமும் 'நாயகன்' படத்தைப்போலத்தான் இருக்கும்," என்று கூறியுள்ளார்.
இது கமல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

