தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவில் வருவான் 'வீரன்'

1 mins read
a1c95152-4d0d-4d34-a869-c4a662d12242
-

இரண்­டாண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு 'ஹிப் ஹாப்' ஆதி நடிப்­பில் உரு­வாகி வரு­கிறது 'வீரன்' திரைப்­ப­டம்.

இந்­நி­லை­யில் தாம் அதிக படங்­களில் நடிக்­கா­தது ஏன் என்­பது குறித்து அவர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

"ஒரு படத்­தில் ஒப்­பந்­த­மான பிறகு அதில் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரத்­துக்­காக நிறைய மெனக்­கெ­டு­வேன். இசை­ய­மைக்­கும் வேலை­யும் இருக்­கும்.

"இதற்கு முன்பு 'நட்பே துணை' படத்­துக்­காக சில விளை­யாட்டு நுணுக்­கங்­க­ளைக் கற்­றேன். வீரன் படத்­துக்­காக குதிரை ஏற்­றத்­துக்­கான பயிற்­சி­யில் ஈடு­பட்­டேன். இரண்டு ஆண்­டு­க­ளாக முனை­வர் பட்­டம் பெற அதி­கம் படிக்க வேண்­டி­யி­ருந்­தது. என­வே­தான் அதிக படங்­களில் நடிக்க முடி­ய­வில்லை," என்­கி­றார் ஆதி.

தற்­போது ஏ.ஆர்.கே.சர­வ­ணன் இயக்­கத்­தில் இவர் நடித்­துள்ள வீரன் படம் உட­லில் இருந்து மின் சக்­தியை வெளிப்­படுத்­தும் மண் சார்ந்த 'சூப்­பர்' நாய­கன் கதை­யாம்.

"குல­சா­மி­கள் எல்­லாமே இது­போன்ற கதா­நா­ய­கர்­க­ளாக இருந்­த­வர்­கள்­தான். அடி­தடி, நகைச்­சுவை, குடும்ப உணர்­வு­கள் என அனைத்து அம்­சங்­களும் இடம்­பெற்­றுள்ள படைப்­பாக இப்­ப­டம் உரு­வா­கிறது," என்­கி­றார் ஆதி.